ஆப்நகரம்

NPS: பென்சன் வாங்கணும்னா இது கட்டாயம்... ஆதாரை இணைப்பது எப்படி?

தேசிய பென்சன் திட்டத்தில் ஆதாரை இணைப்பது எப்படி என்று இங்கே பார்க்கலாம்...

Samayam Tamil 13 Feb 2021, 1:37 pm
தேசிய சேமிப்புத் திட்டம் என்பது மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டமாகும். இத்திட்டம் முதலில் 2004ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே தொடங்கப்பட்டது அதன் பின்னர் 2009ஆம் ஆண்டில் அனைத்து பொதுமக்களுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டது. 18 முதல் 65 வயது வரை உள்ள எந்தவொரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். தேசிய பென்சன் திட்டத்தில் டையர் 1, டையர் 2 என இரண்டு வகைகள் உள்ளன. இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறுவதற்கு மத்திய அரசு சில விதிமுறைகளை வகுத்துள்ளது.
Samayam Tamil nps


தேசிய பென்சன் திட்டத்தில் ஆதாரை இணைப்பது அவசியமாகும். வாடிக்கையாளர்களின் நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் வரிச் செலவுகளைக் கண்காணிக்க ஆதார் இணைப்பு அவசியமாகிறது. அதேபோல கேஒய்சி சரிபார்ப்பையும் ஆதார் வாயிலாக வாடிக்கையாளர்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

தேசிய பென்சன் திட்டத்தில் புதிதாக கணக்கு ஓப்பன் செய்பவர்கள் அப்போதே ஆதாரை இணைத்துவிடலாம். அதற்கு 'Registration' என்ற வசதியின் கீழ் ஆதார் எண்ணை இணைக்க முடியும்.

இப்போது, தேசிய பென்சன் கணக்கில் ஆதாரை இணைப்பது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

https://cra-nsdl.com/CRA/ என்ற முகவரியில் தேசிய பென்சன் கணக்கில் லாகின் செய்யவும்.

அடுத்ததாக, 'update details' என்ற வசதியில் சென்று 'update Aadhaar/Aadhaar Details' என்பதை கிளிக் செய்யவும்.

ஆதார் நம்பரைப் பதிவு செய்து 'Generate OTP' என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

’Proceed' கொடுத்தவுடன் உங்களது மொபைல் எண்ணுக்கு OTP வரும். இந்த நம்பரை டைப் செய்து ’continue' கொடுத்தால் ஆதார் இணைக்கப்பட்டுவிடும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்