ஆப்நகரம்

ஜீரோ பேலன்ஸ்: ஏடிஎம்மில் பணம் எடுத்தால் என்ன ஆகும்?

உங்க அக்கவுண்ட்ல பணம் இருக்கா, இல்லையா?

Samayam Tamil 20 Jan 2021, 6:40 pm
உங்களது வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று தெரியாமல் ஏடிஎம் சென்று பணம் எடுத்தால் நீங்கள் அதற்கு அபராதம் செலுத்த நேரிடும்.
Samayam Tamil know this rule about failed atm transaction
ஜீரோ பேலன்ஸ்: ஏடிஎம்மில் பணம் எடுத்தால் என்ன ஆகும்?


ஏடிஎம்!

வங்கி வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோருக்கு வங்கிகள் தொடர்பான விதிமுறைகள் தெரிவதில்லை. அது தெரியாமல் அதிகம் கட்டணம் செலுத்துவதும் உண்டு. ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுப்பதிலும் சில விதிமுறைகள் உள்ளன. ஒரு மாதத்தில் இத்தனை முறை இலவசமாகப் பணம் எடுக்கலாம் போன்ற விதிமுறைகள் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் வங்கிக் கணக்கில் பணம் இல்லாமலேயே பணம் எடுக்க முயற்சித்தால் என்ன ஆகும்?

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா!

நீங்கள் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளராக இருந்து நீங்கள் ஏடிஎம் சென்று பணம் எடுப்பதாக இருந்தால் வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டால் ரூ.20 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அதனுடன் ஜிஎஸ்டியும் செலுத்த வேண்டும்.

ஹெச்டிஎஃப்சி பேங்க்!

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியிலும் இதற்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஏடிஎம்மில் பணம் எடுக்க முயற்சித்து பணம் இல்லாமல் அந்த முயற்சி தோல்வியடைந்தால் அதற்கு அபராதமாக வரியுடன் சேர்த்து ரூ.25 செலுத்த வேண்டும்.

மற்ற வங்கிகள்!

ஐசிஐசிஐ வங்கியில் ரூ.25, கோடாக் மகிந்திரா வங்கி, யெஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி போன்ற வங்கிகளிலும் ரூ.25 அபராதம் செலுத்த வேண்டும். இதுபோல வெவ்வேறு வங்கிகளில் தோல்வியுறும் பரிவர்த்தனைகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

என்ன செய்வது?

இப்போதெல்லாம் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் பணம் உள்ளதா இல்லையா என்று தெரிந்துகொள்ள சுலபமான வழிகள் உள்ளன. ஏடிஎம் செல்வதற்கு முன்பாக உங்களது வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்று தெரிந்துகொள்வது நல்லது. மிஸ்டு கால், எஸ்எம்எஸ் போன்றவற்றின் மூலமாகவும் பேலன்ஸ் விவரத்தை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்