ஆப்நகரம்

ரயில்களில் போனை சார்ஜ் செய்யக் கூடாது.. இப்படி இரு ரூல் இருக்கு தெரியுமா?

ரயில்களில் போன் அல்லது லேப்டாப் சார்ஜ் போடுவதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. இதுபற்றி நிறையப் பேருக்குத் தெரியாது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 11 Apr 2023, 10:39 am
இந்திய ரயில்வேயில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். இந்திய ரயில்வே தனது பயணிகளின் வசதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் அடிக்கடி சில விதிகளை மாற்றிக்கொண்டே இருக்கிறது. தற்போது, இந்திய ரயில்வே தனது பயணிகளுக்காக ரயில்களில் மொபைல் சார்ஜிங் விதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அமல்படுத்தியுள்ளது.
Samayam Tamil mobile


தற்போதைய காலகட்டத்தில் மொபைல் அல்லது லேப்டாப் பயன்படுத்துவது சகஜமாகிவிட்டது. இத்தகைய சூழ்நிலையில், ரயிலின் ஒவ்வொரு இருக்கையிலும் பயணிகளுக்கு இதற்காக கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரயிலில் எல்லா நேரமும் உங்கள் போனை சார்ஜ் செய்ய முடியாது. இந்திய ரயில்வே விதிகளின்படி, இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ரயில்களில் போன் அல்லது லேப்டாப்பை சார்ஜ் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. ரயிலில் எந்தவித விபத்தும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உண்மையில், மக்கள் பெரும்பாலும் தங்கள் தொலைபேசியை சார்ஜ் செய்துவிட்டு ஸ்விட்சை அணைக்க மறந்துவிடுகிறார்கள். இவ்வாறு இரவு முழுவதும் ஃபோன் அல்லது லேப்டாப்பை சார்ஜ் செய்துகொண்டே தூங்கினால், ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், ரயில்வே அதன் பயணிகள் தங்கள் தொலைபேசிகளை ரவில் சார்ஜ் செய்வதை தடை செய்கிறது.

இது தொடர்பாக இந்திய ரயில்வே துறை புதிய விதி எதையும் அமல்படுத்தவில்லை. எனினும் இது தொடர்பாக ரயில்வே துறை அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. ரயில்களில் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்கும் வகையில் கடந்த 2014ஆம் ஆண்டு ரயில்வே வாரியம் இந்த உத்தரவை பிறப்பித்தது. இதற்குப் பிறகு, 2021ஆம் ஆண்டில் ரயில்வே அனைத்து துறைகளுக்கும் இதேபோன்ற உத்தரவை பிறப்பித்தது. ஆனால் சரியான தகவல் இல்லாததால் பெரும்பாலான பயணிகளுக்கு இந்த விதி பற்றி தெரிவதில்லை.

ரயில் பயணம் செய்பவர்கள் முதலில் ரயில்வே தொடர்பான முக்கியமான விதிமுறைகள் மற்றும் சிறப்பு வசதிகள் குறித்து தெரிந்துகொள்வது நல்லது. இல்லாவிட்டால் பயணத்தின்போது சிரமங்களை சந்திக்க நேரிடும். அதேபோல, சிறப்பு வசதிகளைப் பயன்படுத்த முடியாமலும் போகலாம்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்