ஆப்நகரம்

டிசிஎஸ் CEO ராஜேஷ் கோபிநாதன் ராஜினாமா.. புதிய சிஇஓ இவர்தான்!

டிசிஎஸ் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய சிஇஓ ஆக கிருத்திவாசன் நியமனம்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 17 Mar 2023, 11:11 am
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் (TCS) CEO ராஜேஷ் கோபிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது திடீர் ராஜினாமாவை தொடர்ந்து டிசிஎஸ் நிறுவனத்தின் புதிய CEO ஆக கிருத்திவாசன் (Krithivasan) அறிவிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil rajesh gopinathan - krithivasan
rajesh gopinathan - krithivasan


ராஜேஷ் கோபிநாதன் ராஜினாமாவை தொடர்ந்து கிருத்திவாசனை CEO ஆக நியமிக்க டிசிஎஸ் போர்டு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த நிதியாண்டில் டிசிஎஸ் CEO ஆக கிருத்திவாசன் பதவி ஏற்றுக்கொள்வார்.

இந்தியாவின் இளம் CEOக்களில் ஒருவரான ராஜேஷ் கோபிநாதனுக்கு 52 வயதாகிறது. டிசிஎஸ் நிறுவனத்தில் 22 ஆண்டுகளாக ராஜேஷ் கோபிநாதன் பணிபுரிந்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் ராஜேஷ் கோபிநாதனுக்கு ஐந்து ஆண்டுகள் CEO பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டது.

இந்த சூழலில் அவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார். சொந்த காரணங்களுக்காக அவர் ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். ராஜேஷ் கோபிநாதனின் பதவிக்காலத்தில் டிசிஎஸ் நிறுவனம் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது.

டிசிஎஸ் CEO பதவியில் ராஜேஷ் கோபிநாதன் இருந்த காலத்தில் டிசிஎஸ் பங்கு விலை 160% உயர்ந்துள்ளது. ராஜேஷ் கோபிநாதனுக்கு முன் டிசிஎஸ் தலைவராக சந்திரசேகரன் பதவி வகித்து வந்தார். 2017ஆம் ஆண்டில் சந்திரசேகரன் டாடா குழுமத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து டிசிஎஸ் தலைவராக ராஜேஷ் கோபிநாதன் நியமிக்கப்பட்டார். அவர் ராஜினாமா செய்துள்ள சூழலில், தனது பதவிக்காலத்தை முழு மகிழ்ச்சியுடன் அனுபவித்ததாக ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும், புதிய CEO ஆக நியமிக்கப்படும் கிருத்திவாசன் டிசிஎஸ் நிறுவனத்தை இன்னும் பெரிய உயரங்களுக்கு எடுத்துச் செல்வார் என நம்புவதாக ராஜேஷ் கோபிநாதன் தெரிவித்துள்ளார்.

வரும் செப்டம்பர் 15ஆம் தேதியுடன் ராஜேஷ் கோபிநாதன் டிசிஎஸ் CEO பதவியில் நீடிப்பார். அதன்பின் டிசிஎஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக கிருத்திவாசன் பதவி ஏற்பார்.

ராஜேஷ் கோபிநாதன் ராஜினாமா செய்தி வெளியானதை தொடர்ந்து இன்று டிசிஎஸ் பங்கு விலை குறைந்துள்ளது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்