ஆப்நகரம்

வெளிநாடு செல்லும் காதி முகக்கவசங்கள்... கொரோனா தந்த வாய்ப்பு!

இந்தியாவில் தயாரிக்கப்படும் காதி முகக்கவசங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் வந்துள்ளன.

Samayam Tamil 22 May 2020, 4:10 pm
கடந்த ஐந்து ஆண்டுக் காலத்தில் காதி பிராண்ட் இந்தியாவில் பரவலாக அனைவராலும் ஏற்கப்படும் பிராண்டாக மாறியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசானது காதி ஆடைகளைப் பிரபலப்படுத்தவும், காதி மற்றும் கிராமப்புற தொழில் துறையினரின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் காதி ஆடைகள் கடந்த சில ஆண்டுகளாகவே வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. சுற்றுச் சூழலுக்கு உகந்த தயாரிப்புகளாகக் காதிப் பொருட்கள் இருப்பதால் இதன் உள்நாட்டு வர்த்தகமும் ஏற்றுமதி வாய்ப்பும் பிரகாசமாகியுள்ளன.
Samayam Tamil face mask


தற்போதைய கொரோனா பாதிப்பு நிலவும் சூழலில் முகக் கவசங்களுக்கான தேவை இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் மிகவும் அதிகமாக இருக்கிறது. எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி முகக்கவசங்கள் உற்பத்தியைத் துரிதப்படுத்தியுள்ள காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையம் ஏற்றுமதி வாய்ப்புகளை எதிர்நோக்கியுள்ளது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி சலுகைத் திட்டத்தை அறிவித்த அடுத்த சில நாட்களிலேயே இந்த காதி முகக்கவசங்கள் உற்பத்தி மற்றும் வர்த்தகத்துக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச சமையல் சிலிண்டர் பெறுவது எப்படி?

உலக அளவில் கொரோனா தொற்று காலத்தில் முகக்கவசங்களுக்கான தேவை அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு இரட்டை அடுக்குகள் மற்றும் மூன்று அடுக்குகள் கொண்ட பருத்தி மற்றும் பட்டு முகக்கவசங்களைத் காதி மற்றும் கிராமப்புற தொழில் ஆணையம் தயாரித்துள்ளது. இவை ஆண்களுக்கு இரண்டு வண்ணங்களிலும், பெண்களுக்குப் பல வண்ணங்களிலும் கிடைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்த ஆணையம் 8 லட்சம் முகக்கவசங்களை வழங்குவதற்கான ஆர்டர்களைப் பெற்றுள்ளது. ஊரடங்கு காலத்தில் ஏற்கெனவே 6 லட்சம் முகக் கவசங்கள் வழங்கப்பட்டு விட்டன.

கொரோனாவால் 4 மடங்கு வளர்ச்சி... பேடிஎம் ஹேப்பி!

மருத்துவம் சாராத, அறுவை சிகிச்சை சாராத அனைத்து வகையான முகக்கவசங்களையும் ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய வர்த்தக தொழில் துறை அமைச்சகம் விலக்கிக் கொண்டதையடுத்து, காதி, பருத்தி மற்றும் பட்டு முகக்கவசங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் கண்டறியும் என்று சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கை மே 16ஆம் தேதி அந்நிய வர்த்தகத்துக்கான தலைமை இயக்குநரகத்தால் வெளியிடப்பட்டது.

பங்குச் சந்தை நிலவரம்... ரிலையன்ஸுக்கு அடித்த ஜாக்பாட்!

ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் துபாய், அமெரிக்கா, மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளுக்குக் காதி முகக்கவசங்களை ஏற்றுமதி செய்யக் காதி மற்றும் கிராமப்புற தொழில் ஆணையம் திட்டமிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், இந்த நாடுகளில் காதி மிகவும் பிரபலமாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மூலமாகக் காதி முகக்கவசங்களை விற்பனை செய்ய இந்த ஆணையம் திட்டமிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்