ஆப்நகரம்

மியூச்சுவல் ஃபண்டில்.. குவியும் மக்கள்.. 9 மாதங்களில் ரூ.15,000 கோடி வசூல்!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

Samayam Tamil 11 Mar 2023, 1:58 pm
பங்குச் சந்தைகளில் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், மியூச்சுவல் ஃபண்டில் பிப்ரவரியில் ரூ.15,685 கோடி மதிப்பிலான முதலீடுகளைக் பெற்றுள்ளது. இது ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிக முதலீடுகளை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.7,303 கோடியாக இருந்த முதலீடுகள் ஜனவரியில் ரூ.12,546 கோடியாக பதிவு செய்துள்ளது.
Samayam Tamil mutual fund


மியூச்சுவல் ஃபண்ட் சங்கத்தின் தரவுகளின்படி, பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் 24 மாதங்களில் அதிக முதலீடுகளைப் பெற்றுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் துறையில் பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் வரவு ரூ.9,575 கோடியாக உள்ளது. வெளிநாட்டு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் வெளியேற்றத்தால் ஏற்ற, இறக்கங்களைக் கண்டாலும், இந்திய முதலீட்டாளர்கள் சரியான முறையில் தொடர்ந்து முதலீடு செய்து வருவதாக FYERS இன் ஆராய்ச்சித் தலைவர் கோபால் காவலரெட்டி கூறியுள்ளார்.

மேலும் அக்டோபர் 2022 இல் SIP முறையில் ஒவ்வொரு மாதமும், ரூ.13,000 கோடி முதலீடுகள் பெறப்பட்டுள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன. மேலும் thematic or sectoral fund -இல் ரூ.3,856 கோடியாகவும், ஸ்மால் கேப் (small-cap funds) ஃபண்டில் ரூ.2,246 கோடி மற்றும் மல்டிகேப் ஃபண்டுகளில் ரூ.1,977 கோடியாகவும் பணமுதலீடுகள் பெறப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி ஈக்விட்டி மற்றும் இண்டெக்ஸ் ஃபண்டுகளின் முதலீடுகள் சுமார் ரூ.6,244 கோடியும் பெறப்பட்டுள்ளது. மேலும் கோல்ட் ஈடிஎஃப் ஃபண்டுகளில் ரூ.165 கோடி மதிப்பிலான முதலீடுகள் குவிந்துள்ளன.

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.


அடுத்த செய்தி

டிரெண்டிங்