ஆப்நகரம்

தங்கப் பத்திரம் வாங்க இன்றே கடைசி வாய்ப்பு.. தள்ளுபடி, லாபம், வட்டி என பல பலன்கள் உண்டு!

தங்கப் பத்திரம் வாங்குவதற்கு இன்றே கடைசி நாள். தங்கப் பத்திரம் ஏன் சிறந்த தங்கம் முதலீடு என்பதை பாருங்கள்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 10 Mar 2023, 2:33 pm
தங்கப் பத்திரம் (Sovereign Gold Bond) விற்பனை மார்ச் 6ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் (மார்ச் 10) தங்கப் பத்திர விற்பனை முடிவுக்கு வருகிறது. நடப்பு நிதியாண்டில் இதுவே கடைசி தங்கப் பத்திர விற்பனை என்பது குறிப்பிடத்தக்கது. இனி அடுத்த நிதியாண்டில்தான் தங்கப் பத்திரம் விற்பனைக்கு வரும்.
Samayam Tamil sovereign gold bond
sovereign gold bond


தங்கப் பத்திரம் முதலீடு

தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டுமெனில் தங்கப் பத்திரம்தான் சிறந்த திட்டம். ஏனெனில் தங்கப் பத்திரத்தில் ஒரே சமயத்தில் பல்வேறு அட்டகாசமான பலன்கள் கிடைக்கின்றன. முதலில், தங்கப் பத்திரம் வாங்கும்போதே டிஜிட்டல் முறையில் வாங்கினால் விலையில் தள்ளுபடி கிடைக்கிறது.

செலவுகள் இல்லை

இரண்டாவதாக தங்கப் பத்திரத்துக்கு ஜிஎஸ்டி (GST), மூலதன ஆதாய வரி (Capital gains tax) ஆகிய வரிகள் கிடையாது. மூன்றாவதாக, லாக்கரில் சேமித்து வைப்பதற்கான செலவுகள் இல்லை. செய்கூலி, சேதாரம் போன்ற செலவுகளும் இல்லை.

லாபம்

சரி செலவுகள், வரி இல்லாமல் இருப்பதெல்லாம் இருக்கட்டும். தங்கப் பத்திரம் வாங்குவதால் என்ன லாபம் கிடைக்கும்? தங்கத்தின் மதிப்பு உயர உயர, தங்கப் பத்திரத்தின் மதிப்பும் உயரும். பத்திரம் முதிர்வடையும்போது மொத்த லாபமும் கிடைக்கும்.

வட்டி

இதுமட்டுமல்ல, தங்கப் பத்திரத்தில் ஆண்டுக்கு 2.5% வட்டியும் கிடைக்கும். இந்த வட்டி வருமானம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தப்படும். இதுமட்டுமல்லாமல், தங்கப் பத்திரத்தை வைத்து வங்கிகளில் கடனும் பெற்றுக்கொள்ளலாம்.

தங்கப் பத்திரம் விலை

தற்போது தங்கப் பத்திரத்துக்கு ஒரு கிராம் 5611 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் வாங்கினால் 50 ரூபாய் தள்ளுபடியுடன் ஒரு கிராம் 5,561 ரூபாய் விலைக்கு தங்கப் பத்திரத்தை வாங்கலாம்.

எவ்வளவு வாங்கலாம்?

ஒரு நபர் குறைந்தபட்சம் 1 கிராமுக்கு தங்கப் பத்திரம் வாங்க வேண்டும். அதிகபட்சம் 4 கிலோ வரை தங்கப் பத்திரம் வாங்கலாம்.

தங்கப் பத்திரம் வாங்குவது எப்படி?


வங்கிகள், தபால் அலுவலகங்கள், பங்குச் சந்தைகள் வாயிலாக தங்கப் பத்திரம் வாங்கலாம்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்