ஆப்நகரம்

LIC பாலிசிதாரர்களுக்கு கடைசி வாய்ப்பு! உடனே இந்த வேலைய முடிக்கலனா பிரச்சினைதான்!

மார்ச் 25ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்காவிட்டால் உங்கள் பணத்துக்கு ஆபத்து...

Samayam Tamil 16 Mar 2022, 9:38 am
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்ஐசி) தனது பாலிசிதாரர்களுக்கு மிகப் பெரிய நிவாரணம் வழங்கியுள்ளது. லேப்ஸ் ஆன பாலிசிதாரர்களுக்கு தற்போது நிவாரணம் கிடைத்துள்ளது. பாலிசி காலாவதியாகிவிட்டால் அதற்கு கட்டணம் செலுத்துவதன் மூலம் காலாவதியான பாலிசியை நீங்கள் புதுப்பிக்கலாம்.
Samayam Tamil lic policy


அவ்வாறு காலாவதியான பாலிசியின் பிரீமியத்தை டெபாசிட் செய்ய 2022 மார்ச் 25 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகையின் கீழ், டேர்ம் இன்ஷூரன்ஸ், மல்டிபிள் ரிஸ்க் பாலிசிகள் போன்ற அதிக ரிஸ்க் இன்சூரன்ஸ் திட்டங்களுக்கு தாமதக் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் பிரீமியம் செலுத்த வேண்டிய தேதி 5 ஆண்டுகளுக்கு மேல் இருக்கக்கூடாது. அதாவது, முதல் பிரீமியம் செலுத்திய பிறகு, செலுத்தாமல் தவறவிட்ட 5 ஆண்டுகளுக்குள் பாலிசியை நீங்கள் புதுப்பிக்கலாம். இந்தச் சலுகையின் மூலம், பிரீமியம் செலுத்தும் காலத்திற்குள் காலாவதியாகி, அதன் புதுப்பிப்பு தேதி வரை முடிவடையாத பாலிசிகளை மீண்டும் புதுப்பிக்கலாம்.

LIC பாலிசிதாரர்களுக்கு எச்சரிக்கை.. போலியான பாலிசியால் பரபரப்பு!
இந்தத் திட்டத்தின் கீழ், ரூ.1 லட்சம் பிரீமியம் உள்ள பாரம்பரிய மற்றும் உடல்நலக் காப்பீட்டின் தாமதக் கட்டணத்தில் 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2,000 தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலான பாலிசியின் தாமதக் கட்டணத்தில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2,500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதுதவிர, ரூ.3 லட்சத்துக்கும் மேலான பிரீமியம் கொண்ட பாலிசியின் தாமதக் கட்டணத்தில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3000 தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே காலாவதியான பாலிசி கொண்ட பாலிசிதாரர்கள் மார்ச் 25ஆம் தேதிக்குள் அதைப் புதுப்பிப்பது நல்லது. இல்லாவிட்டால் காப்பீட்டின் பலன்கள் கிடைக்காமல் போகலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்