ஆப்நகரம்

இரக்கம் இல்லயா உங்களுக்கு? பணிநீக்கம் குறித்து ரத்தன் டாட்டா காட்டம்!

கொரோனா காலத்தில் இந்திய நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது இரக்கமற்ற செயல் என்று ரத்தன் டாடா கடுமையாகச் சாடியுள்ளார்.

Samayam Tamil 24 Jul 2020, 9:55 pm
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியபோது, அதன் பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொழில் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. நிறுவனங்கள் அனைத்துக்கும் கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டது. கடன் பிரச்சினை, நிதி நெருக்கடி போன்ற் பல்வேறு காரணங்களால் செலவுகளைக் குறைக்கவேண்டிய சூழல் ஏற்பட்டதால் பணிநீக்கப் பணியில் நிறுவனங்கள் இறங்கின. அனைத்துத் துறைகளிலும் நிறுவனங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தங்களது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் தொடங்கின.
Samayam Tamil ratan tata


நீண்ட நாள் ஊழியர்கள் பலர் வலுக்கட்டாயமாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்; நீக்கப்பட்டு வருகின்றனர். புதிய வேலைவாய்ப்புகளும் குறைந்துவிட்டன. ஏர் இந்தியா உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் கூட இந்த நெருக்கடியில் பணிநீக்கம் செய்தன. கொரோனா போன்ற இப்படிப்பட்ட நேரத்தில் வேலையை விட்டு நீக்குவது ஊழியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. நமக்காக யாராவது குரல் கொடுக்க மாட்டார்களா என்று ஊழியர்கள் ஏங்கிக் கொண்டிருந்த சமயத்தில் ரத்தன் டானா இலகிய மனதுடன் முன்வந்துள்ளார். இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமத்தைச் சேர்ந்த இவர், பணிநீக்க செய்திகளைக் கேட்டு வெகுண்டெழுந்துள்ளார்.

குறுவை சாகுபடியில் முன்னேற்றம்... விவசாயிகள் மகிழ்ச்சி!

இந்த கொரோனா வைரஸ் பிரச்சனை காலத்தில் இந்திய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்வது மற்றவர்கள் (ஊழியர்கள்) உணர்வைப் புரிந்து கொள்ளாததையே காட்டுகிறது என்று கூறியுள்ளார் ரத்தன் டாடா. மேலும் அவர், ”ஊழியர்கள் தங்களது நிறுவனங்களுக்காக வேலை பார்க்கின்றனர். அவர்களது வேலை நேரம் முழுக்க நிறுவனத்துக்காகவே முழு மூச்சுடன் உழைக்கின்றனர். ஆனால் ஒரு நெருக்கடி என்று வரும் போது நிறுவனங்கள் அந்த ஊழியர்களையே வெளியே விரட்டுவது நியாயமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பணக்காரர்கள் பட்டியல்: மேலே செல்லும் அம்பானி!

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், “நிறுவனங்கள் இக்கட்டான சமயங்களில் மீண்டு வருவதற்கு சில விஷயங்களை செய்ய வேண்டியுள்ளது அவசியமானதுதான். கொரோனா சமயத்தில் வீட்டில் இருந்தே வேலை என்பது ஒரு நல்ல தீர்வு. அதேநேரம், ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவது மட்டும் தீர்வாக இருக்காது. அந்த ஊழியர்கள் மீதும் உங்களுக்கு பொறுப்பு உள்ளது. வணிகம் என்பது வெறும் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல; அது சரியானதைச் செய்து வாடிக்கையாளர், பங்குதாரர், பணியாற்றுபவர் என அனைவரின் நம்பிக்கையும் பெறுவது ஆகும்” என்று சுட்டிக்காட்டியுள்ளார் ரத்தன் டாடா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்