ஆப்நகரம்

இந்தியாவுக்கே மீண்டும் வரோம்.. பிரபல பீட்சா நிறுவனம் சர்பிரைஸ் முடிவு!

பப்பா ஜான்ஸ் பீட்சா நிறுவனம் மீண்டும் இந்தியாவில் உணவகங்களை திறக்க முடிவு செய்துள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 6 Apr 2023, 2:07 pm
இந்தியாவில் மீண்டும் தனது உணவகங்களை தொடங்குவதற்கு பிரபல பீட்சா நிறுவனமான பப்பா ஜான்ஸ் (Papa Johns) பீட்சா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
Samayam Tamil papa johns
papa johns


அமெரிக்காவை சேர்ந்த பிரபல பப்பா ஜான்ஸ் முன்னணி பீட்சா நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனத்துக்கு சுமார் 50 நாட்களில் 5700 உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. உலகளவில் மூன்றாவது மிகப்பெரிய பீட்சா நிறுவனமாக பப்பா ஜான்ஸ் உள்ளது.

பப்பா ஜான்ஸ் நிறுவனம் ஏற்கெனவே இந்தியாவில் தனது உணவகங்களை திறந்தது. ஆனால், 2017ஆம் ஆண்டில் இந்தியாவில் தனது உணவகங்களை மூடிவிட்டு பப்பா ஜான்ஸ் நிறுவனம் வெளியேறிவிட்டது.

இந்நிலையில், மீண்டும் இந்தியாவில் தனது உணவகங்களை திறப்பதற்கு பப்பா ஜான்ஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக பிஜேபி இன்வெஸ்ட்மெண்ட்ஸ் (PJP Investments) நிறுவனத்துடன் பப்பா ஜான்ஸ் நிறுவனம் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது.

2033ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 650 பீட்சா உணவகங்களை திறப்பதற்கு பப்பா ஜான்ஸ் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. முதற்கட்டமாக பெங்களூருவில் தனது உணவகங்களை பப்பா ஜான்ஸ் நிறுவனம் திறக்க இருக்கிறது.

அதையடுத்து சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களில் பப்பா ஜான்ஸ் உணவகங்களை திறக்க இருக்கிறது. முதலில் தென்னிந்திய நகரங்களில் உணவகங்களை அமைத்த பின் மற்ற மாநிலங்களில் உணவகங்களை திறக்க பப்பா ஜான்ஸ் முடிவு செய்துள்ளது.

இந்தியாவை ஒரு முக்கிய சந்தையாக கருதுவதாலும், வருமானம் அதிகரிப்பு போன்ற காரணங்களாலும் இந்திய நகரங்களில் மீண்டும் பப்பா ஜான்ஸ் உணவகங்களை திறக்க முடிவு செய்துள்ளது.

பப்பா ஜான்ஸ் பீட்சா தனித்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில், பப்பா ஜான்ஸ் பீட்சாவில் பயன்படுத்தப்படும் மாவு உறையவைக்கப்படுவதே இல்லை. நேரடியாகவே மாவில் இருந்து பீட்சா தயாரிக்கப்படுகிறது. மேலும், செடியிலேயே பழுத்த தக்காளி மூலம் தயாரிக்கப்படும் சாஸ் மட்டுமே பப்பா ஜான்ஸ் பீட்சாவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் செயற்கையான சுவையூட்டும் பொருட்களை பப்பா ஜான்ஸ் பீட்சாவில் சேர்ப்பதில்லை.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்