ஆப்நகரம்

LIC பாலிசிதாரர்களுக்கு எச்சரிக்கை! இதைச் செய்யாவிட்டால் ஆபத்து!

பான் கார்டை எல்.ஐ.சி பாலிசியுடன் இணைப்பது கட்டாயமாகும். அதை எப்படி இணைப்பது என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்...

Samayam Tamil 24 Oct 2021, 4:00 pm
ஆதார் மற்றும் பான் கார்டுகள் இப்போது அனைத்து விஷயங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகின்றன. அதை இணைப்பதற்கு கால அவகாசமும் வழங்கப்பட்டது. இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளவர்களும் பான் மற்றும் ஆதார் கார்டை பாலிசியுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. தனது வாடிக்கையாளர்கள் பான் கார்டை பாலிசியுடன் இணைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இதற்காக தனது கோடிக் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு sms அனுப்பியுள்ளது.
Samayam Tamil LIC


எல்.ஐ.சி. பாலிசியை பான் கார்டுடன் இணைப்பது சுலபமான ஒன்றுதான். எல்.ஐ.சி. வெப்சைட்டிலேயே நீங்கள் அதை இணைக்க முடியும்.

https://linkpan.licindia.in/UIDSeedingWebApp/ என்ற வெப்சைட்டில் சென்று நேரடியாக இணைக்கலாம்.

அதில் பாலிசிதாரரின் பெயர், பாலினம், பான் எண், மொபைல் நம்பர், பிறந்த தேதி போன்ற விவரங்கள் கேட்கப்படும். அதைப் பூர்த்தி செய்து கேப்ட்சா குறியீட்டையும் பதிவிட்டு ’Get OTP' கொடுக்க வேண்டும்.



உடனே உங்களுடைய மொபைல் நம்பருக்கு ஓடிபி வரும். அதைப் பதிவிட்டு சமர்ப்பிக்க வேண்டும். உடனடியாக உங்களது எல்.ஐ.சி. பாலிசியும் பான் கார்டும் இணைக்கப்பட்டுவிடும்.

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் காப்பீட்டுத் திட்டங்களில் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பது கட்டாயமாகும். எல்.ஐ.சி. நிறுவனம் SMS சேவை மூலம் ஆதார் இணைப்பை வழங்குவதாக சமுக வலைதளங்களில் செய்தி பரவியது. அது தவறான செய்தி என்று கூறியுள்ள எல்.ஐ.சி. நிறுவனம் ஆன்லைன் மற்றும் கிளைகள் மூலமாகவே பாலிசிகளை இணைக்க முடியும் என்று கூறியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்