இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. பொதுமக்களுக்கு நிறைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வயது மற்றும் தேவைக்கு ஏற்ப நிறைய பாலிசிகள் எல்.ஐ.சி.யிடம் உள்ளன. ஆண், பெண், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருமே பயன்பெறும் வகையில் நிறைய பாலிசிகளை எல்.ஐ.சி. வழங்குகிறது. அவற்றுள் மிக முக்கியமான ஒரு பாலிசிதான் ’நியூ சில்ரன்ஸ் மணி பேக் பிளான்’பாலிசி.
இந்த பாலிசியை உங்களுடைய குழந்தைகளுக்கு பரிசாக அளிக்கலாம். அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க இது பெரிதும் உதவும். உயர்கல்வி, திருமணம் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு இந்த பாலிசியில் கிடைக்கும் பணம் உதவியாக இருக்கும். இந்த பாலிசியில் நீங்கள் தினமும் 150 ரூபாய் என்ற வீதத்தில் முதலீடு செய்தாலே போதும். பெரிய தொகை கையில் இருக்கும். மொத்தம் 25 ஆண்டுகள் முதிர்வு கொண்டது இந்த பாலிசி.
இந்த பாலிசிக்கான முதிர்வுத் தொகை பல்வேறு தவணைகளாக வழங்கப்படும். குழந்தைக்கு 18 வயது ஆகும்போது முதல் தவணையும், 20 வயதில் இரண்டாவது தவணையும், 22 வயதில் மூன்றாவது தவணையும் கிடைக்கும். தவணை முறையில் 60 சதவீத தொகையை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். எஞ்சிய 40 சதவீதம் முதிர்வு காலத்திலேயே கிடைக்கும்.
இந்த பாலிசியில் குறைந்தபட்ச காப்பீட்டு தொகை ரூ.1 லட்சம். அதிகபட்ச வரம்பு கிடையாது. தவணை முறையில் எடுக்காவிட்டால் மொத்தத் தொகையும் கடைசியில் வட்டியுடன் சேர்த்து கிடைக்கும். பிறந்த குழந்தை முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்த பாலிசியை எடுக்கலாம். உங்கள் குழந்தைக்கு 25 வயது ஆகும்போது இந்த பாலிசியின் முழுப் பயனும் கிடைக்கும்.
தினமும் 150 ரூபாய் என்ற வீதத்தில் மொத்தம் 25 ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்யும் தொகை ரூ.14 லட்சம். ஆனால் உங்களுக்கு கிடைப்பதோ மொத்தம் ரூ.19 லட்சம். பாலிசிதாரர் பாலிசி காலத்தில் இறக்காமல் இருந்தால் இந்தப் பலனைப் பெறலாம். இந்த பாலிசியை எடுப்பதற்கு பெற்றோரின் ஆதார் கார்டு, பான் கார்டு அவசியம். பாலிசிதாரருக்கு மருத்துவ சான்றிதழ் தேவை.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
இந்த பாலிசியை உங்களுடைய குழந்தைகளுக்கு பரிசாக அளிக்கலாம். அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க இது பெரிதும் உதவும். உயர்கல்வி, திருமணம் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு இந்த பாலிசியில் கிடைக்கும் பணம் உதவியாக இருக்கும். இந்த பாலிசியில் நீங்கள் தினமும் 150 ரூபாய் என்ற வீதத்தில் முதலீடு செய்தாலே போதும். பெரிய தொகை கையில் இருக்கும். மொத்தம் 25 ஆண்டுகள் முதிர்வு கொண்டது இந்த பாலிசி.
இந்த பாலிசிக்கான முதிர்வுத் தொகை பல்வேறு தவணைகளாக வழங்கப்படும். குழந்தைக்கு 18 வயது ஆகும்போது முதல் தவணையும், 20 வயதில் இரண்டாவது தவணையும், 22 வயதில் மூன்றாவது தவணையும் கிடைக்கும். தவணை முறையில் 60 சதவீத தொகையை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். எஞ்சிய 40 சதவீதம் முதிர்வு காலத்திலேயே கிடைக்கும்.
இந்த பாலிசியில் குறைந்தபட்ச காப்பீட்டு தொகை ரூ.1 லட்சம். அதிகபட்ச வரம்பு கிடையாது. தவணை முறையில் எடுக்காவிட்டால் மொத்தத் தொகையும் கடைசியில் வட்டியுடன் சேர்த்து கிடைக்கும். பிறந்த குழந்தை முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்த பாலிசியை எடுக்கலாம். உங்கள் குழந்தைக்கு 25 வயது ஆகும்போது இந்த பாலிசியின் முழுப் பயனும் கிடைக்கும்.
தினமும் 150 ரூபாய் என்ற வீதத்தில் மொத்தம் 25 ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்யும் தொகை ரூ.14 லட்சம். ஆனால் உங்களுக்கு கிடைப்பதோ மொத்தம் ரூ.19 லட்சம். பாலிசிதாரர் பாலிசி காலத்தில் இறக்காமல் இருந்தால் இந்தப் பலனைப் பெறலாம். இந்த பாலிசியை எடுப்பதற்கு பெற்றோரின் ஆதார் கார்டு, பான் கார்டு அவசியம். பாலிசிதாரருக்கு மருத்துவ சான்றிதழ் தேவை.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்