ஆப்நகரம்

LIC: 112 ரூபாய் போதும் - 20 லட்சம் சம்பாதிக்கலாம்!

எல்ஐசி ஜீவன் ஆனந்த் திட்டத்தின் சிறப்பம்சங்களை பற்றி பார்க்கலாம்.

Samayam Tamil 19 Nov 2020, 10:25 am
ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய விரும்புவோருக்கு எல்ஐசி ஜீவன் ஆனந்த் பாலிசி ஒரு அற்புதமான திட்டம். உங்களின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யும் இத்திட்டம் சேமிப்பு இலக்குகளையும் பூர்த்தி செய்கிறது. ஒரே பாலிசியில் முதலீடு, இன்சூரன்ஸ் என இரு பலன்கள் கிடைக்கிறது.
Samayam Tamil lic jeevan anand policy invest 112 rupees and get 20 lakhs
LIC: 112 ரூபாய் போதும் - 20 லட்சம் சம்பாதிக்கலாம்!


யார் முதலீடு செய்யலாம்

18 முதல் 50 வயது வரம்பிலானவர்கள் இந்த பாலிசியில் முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. அதிகபட்ச தொகைக்கு வரம்புகள் இல்லை. இந்த பாலிசியில் ரிஸ்க் கவரும் உண்டு. பாலிசி காலம் 15 ஆண்டுகள் முதல் 35 ஆண்டுகள்.

​எப்படி முதலீடு செய்வது?

இந்த பாலிசியில் தினமும் 112 ரூபாய் சேமித்து முதலீடு செய்தால் 20 லட்சம் ரூபாய் தொகை கிடைக்கும். வாழ்நாள் ரிஸ்க் கவரும் கிடைக்கிறது.

முதல் பிரீமியம்

வயது: 42

பாலிசி காலம்: 25

தொகை: 8,00,000 ரூபாய்

முதல் பிரீமியம் அரையாண்டு வாரியாக 21181 ரூபாய். ஆண்டு பிரிமீயம் என்றால் 41922 ரூபாய். காலாண்டு பிரீமியம் 10701 ரூபாய். மாத பிரீமியம் 3567 ரூபாய்.

​ஒட்டுமொத்த தொகை

மேற்கூறிய கணக்குப்படி ஒட்டுமொத்தமாக செலுத்தப்படும் பிரீமியத் தொகை 1026402 ரூபாய்.

மெச்சூரிட்டி

மெச்சூரிட்டி காலம் முடிந்ததும் 20,00,000 ரூபாய்க்கு மேல் கிடைக்கும். எனவே, ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய விரும்புவோருக்கு இதுவொரு அசத்தலான திட்டம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்