ஆப்நகரம்

LIC வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்: மிஸ் பண்ணிடாதிங்க!

எல்ஐசி நிறுவனத்தின் ஜீவன் சாந்தி பாலிசி திட்டம் இன்னும் சில தினங்களில் மூடப்பட இருப்பதால் வாடிக்கையாளர்கள் முந்திக்கொள்ளவும்.

Samayam Tamil 18 Oct 2020, 4:45 pm

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் எல்ஐசி. இந்திய மக்களுக்கு பலவகை காப்பீட்டு சேவைகளை வழங்கி அவர்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளது எல்ஐசி நிறுவனம். இந்நிறுவனம் மத்திய அரசின் ஆதரவுடன் இயங்கி வருவது கூடுதல் சிறப்பு.
Samayam Tamil Finance


எல்ஐசி நிறுவனத்தின் ஜீவன் சாந்தி பாலிசி இன்னும் சில தினங்களில் மூடப்பட்டுவிடும். அக்டோபர் 20ஆம் தேதியன்று இந்த பாலிசி மூடப்படவிருப்பதாக எல்ஐசி வட்டாரங்கள் கூறுகின்றன.

இத்திட்டத்தின் சிறப்பு அம்சமே, ஒரே ஒரு பிரீமியம் செலுத்தி மாதம் 10,000 ரூபாய் பென்சன் தொகை பெற முடியும் என்பதுதான். எனவே, காலம் தாழ்த்தாமல் உடனடியாக இந்த பாலிசியை வாங்குவது சிறந்தது. ஓய்வுக்கால முதலீட்டு திட்டங்களை தேடி வருவோர்க்கு இது ஒரு அற்புத வாய்ப்பு.

இனி வங்கிக்கு அலைய வேணாம்: வாட்சப்பில் எல்லாம் வந்தாச்சு!

5, 10, 15, 20 ஆண்டுகள் என்ற அடிப்படையிலும் நீங்கள் பென்சன் பெறலாம். இத்திட்டத்தை பயன்படுத்த குறைந்தபட்ச வயது 30, அதிகபட்ச வயது 85. குறைந்தபட்சம் 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்யலாம். அதிகபட்ச தொகைக்கு வரம்பு இல்லை.

ஜீவன் சாந்தி பாலிசியில் உடனடி பென்சன், பிற்கால பென்சன் என இரண்டு திட்டங்கள் இருக்கின்றன. இந்த பாலிசியின் கீழ் நீங்கள் ஒரே பிரீமியம் 20 லட்சம் ரூபாய் செலுத்தி உடனடி பென்சன் திட்டத்தை தேர்வு செய்தால் மாதம் ரூ.10,067 பென்சனாக கிடைக்கும்.

பாலிசிதாரர் உயிரோடு இருக்கும் வரை பென்சன் பணம் வரும். இந்த பாலிசியை நேரடியாக எல்ஐசி அலுவலகத்திலும், ஆன்லைனிலும் வாங்க முடியும். 5 முதல் 20 ஆண்டு காலத்திற்கு ஒரு பெரிய தொகையை டெபாசிட் செய்தால் ஆண்டுக்கு 8.79% முதல் 21.6% வரை பென்சனாக கிடைக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்