ஆப்நகரம்

LIC Insurance: பாலிசிதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

தவறவிட்ட பாலிசிகளை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள எல்ஐசி நிறுவனம் அட்டகாசமான வாய்ப்பை வழங்குகிறது.

Samayam Tamil 26 Sep 2020, 12:42 pm

பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி நாடு முழுவதும் மக்களுக்கு காப்பீட்டு சேவைகளை வழங்கி வருகிறது. இத்தனை ஆண்டுகளாக மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்ற நிறுவனம் எல்ஐசி. மத்திய அரசின் ஆதரவுடன் செயல்படுவது எல்ஐசியின் கூடுதல் சிறப்பு.
Samayam Tamil LIC


எல்ஐசியில் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் பிரீமியத் தொகை செலுத்தாமல் விட்டுவிட்டால் பாலிசி நிறுத்தப்பட்டுவிடும் (Policy Lapse). இப்படி, நிறுத்தப்பட்ட பாலிசிகளை மீட்பதற்காக எல்ஐசி அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது.

பெர்சனல் லோன் - கம்மி வட்டியில் வாங்க பெஸ்ட் சாய்ஸ்!

இதற்காக ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை, பாலிசிகளை புதுப்பித்துக்கொள்வதற்கான முகாமை எல்ஐசி தொடங்கியுள்ளது. இதன்படி அக்டோபர் 9ஆம் தேதி வரை, ஏற்கெனவே நிறுத்தப்பட்ட பாலிசிகளை வாடிக்கையாளர்கள் மீண்டும் புதுப்பிக்கலாம்.

முதல் பிரீமியத் தொகை செலுத்திய தேதியில் இருந்து ஐந்து ஆண்டுகள் வரை குறிப்பிட்ட நிபந்தனைகளுக்குள் பாலிசியை புதுப்பித்துக்கொள்ள முடியும். பிரீமியம் செலுத்துவதற்கான காலத்தை தவறவிட்டு, இன்னும் பாலிசி காலம் முடிவடையாத திட்டங்கள் மீண்டும் புதுப்பித்துக்கொள்ள தகுதியானவை.

தவிர்க்க முடியாத காரணங்களால் பிரீமியம் செலுத்த முடியாமல்போன வாடிக்கையாளர்களுக்கு இதுவொரு அற்புதமான வாய்ப்பு. தவறவிட்ட பழைய பாலிசியை மீண்டும் புதுப்பித்துக்கொள்வதே சிறந்த சாய்ஸ்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்