ஆப்நகரம்

இன்ஃபோசிஸ் பங்கு சரிவால் LIC-க்கு ரூ.5000 கோடி நஷ்டம்!

இன்ஃபோசிஸ் பங்கு (Infosys share) கடுமையாக சரிந்துள்ளதால் எல்ஐசி (LIC) நிறுவனத்துக்கு சுமார் 5000 கோடி ரூபாய் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 17 Apr 2023, 11:48 am
இன்று பங்கு வர்த்தகம் தொடங்கிய பின் இன்ஃபோசிஸ் பங்கு விலை சுமார் 12% சரிந்து 1185 ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது. மார்ச் காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு எதிர்பார்ப்புக்கு ஏற்ப வருமானம் இல்லாததால் இன்ஃபோசிஸ் பங்குக்கான ரேட்டிங்கை சிட்டி, நோமுரா, ஜேபி மோர்கன், கிரெடிட் சூயிஸ் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச புரோக்கரேஜ் நிறுவனங்கள் குறைத்துவிட்டன.
Samayam Tamil lic - infosys
lic - infosys


இதன் எதிரொலியாக இன்று பங்கு வர்த்தகம் தொடங்கிய பின் இன்ஃபோசிஸ் பங்கு விலை 12% சரிந்துவிட்டது. மேலும் டிசிஎஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா உள்ளிட்ட முக்கிய ஐடி பங்குகள் அனைத்துமே இன்று சரிவை சந்தித்துள்ளன.

இன்ஃபோசிஸ் பங்கு விலை சரிவால் எல்ஐசி நிறுவனத்துக்கு 5000 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரர் எல்ஐசி நிறுவனம்தான். எல்ஐசி நிறுவனத்துக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 7.71% பங்கு இருக்கிறது.

எல்ஐசி நிறுவனத்திடம் 28,13,85,267 இன்ஃபோசிஸ் பங்குகள் இருக்கின்றன. கடந்த வியாழன் அன்று பங்கு வர்த்தகம் முடிவில் எல்ஐசி நிறுவனத்திடம் இருந்த இன்ஃபோசிஸ் பங்குகளின் மதிப்பு 39,073 கோடி ரூபாய். இன்று மட்டுமே இன்ஃபோசிஸ் பங்கு 12% சரிந்துள்ளது.

இன்று இன்ஃபோசிஸ் பங்கு விலை அதிகபட்சமாக சுமார் 203 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் எல்ஐசி நிறுவனத்துக்கு 5712 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதுபோக மற்ற முக்கிய பங்குதாரர்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் குடும்பத்தினர் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். நாராயண மூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தி, மகள் அக்ஷதா மூர்த்தி ஆகியோருக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களை பொறுத்தவரை எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட், ஐசிஐசிஐ புருடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் நஷ்டத்தை சந்தித்துள்ளன.

இன்ஃபோசிஸ் பங்கு விலை சரிவால் ஏற்படும் நஷ்டம் என்பது நேரடி நிதி இழப்பு அல்ல. இன்ஃபோசிஸ் பங்கு விலை மீண்டும் உயர்ந்துவிட்டால் இழப்பு சரிகட்டப்பட்டுவிடும்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்