ஆப்நகரம்

பென்சனர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இன்னும் 5 நாள்தான் இருக்கு!!

பென்சன் வாங்குவோர் இதை உடனடியாக செய்யாவிட்டால் டிசம்பர் முதல் பென்சன் கிடைக்காது!

Samayam Tamil 25 Nov 2021, 11:44 am
பென்சன் வாங்கும் அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆயுள் சான்றிதழ் என்ற ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். இது ஜீவன் பிரமான பத்திரம் எனவும் அறிவிக்கப்படுகிறது. இந்தப் பத்திரத்தை பென்சன் வாங்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆண்டின் நவம்பர் மாத இறுதியில் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது நவம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும்.
Samayam Tamil pension


காலக்கெடு முடிய இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளது. அதற்குள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது நல்லது. இந்த ஆயுள் சான்றிதழை வங்கிகள் அல்லது தபால் நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். முன்பெல்லாம் பென்சன் வாங்கும் மூத்த குடிமக்கள் இதற்காக வங்கிக்கும் தபால் நிலையத்துக்கும் நடையாய் நடக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது எங்கும் அலையத் தேவையில்லை. வீட்டிலிருந்தே வேலையை முடித்துவிடலாம்.

டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் வசதி உள்ளது. சில வருடங்களுக்கு முன்னரே இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் கொரோனா பிரச்சினை வந்தபிறகு இந்த வசதியைப் பயன்படுத்தி நிறையப் பேர் தங்களது ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பித்து வருகின்றனர். https://jeevanpramaan.gov.in/ என்ற வெப்சைட்டில் சமர்ப்பிக்கலாம். இதில் பென்சனரின் பெயர், மொபைல் நம்பர், ஆதார் நம்பர் மற்றும் பென்சன் தொடர்பான விவரங்கள் கேட்கப்படும். அவற்றை வழங்கினாலே போதும்.

பென்சன் வாங்குவோருக்கு நிம்மதி.. வெளியான சூப்பர் அறிவிப்பு!
அருகிலுள்ள பொதுச் சேவை மையங்களிலும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். வீட்டுக்கே வந்து ஆயுள் சான்றிதழை வாங்கிச் செல்லும் வசதி தபால் நிலையங்களில் உள்ளன. அதேபோல, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வீடியோ காலிங் மூலமாக ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். பென்சனர்களுக்கு ஏதுவாக இதுபோன்ற நிறைய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி நவம்பர் 30ஆம் தேதிக்குள் பென்சனர்கள் இந்த வேலையை முடிக்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்