ஆப்நகரம்

LIC: எல்ஐசி புதிய பாலிசி.. இவ்வளவு ஸ்பெஷல் அம்சங்களா!

LIC Bima Ratna: எல்ஐசி நிறுவனம் புதிதாக பீமா ரத்னா பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளது.

Samayam Tamil 29 May 2022, 3:27 pm
எல்ஐசி (LIC) நிறுவனம் கடந்த மே 27ஆம் தேதியன்று பீமா ரத்னா (Bima Ratna) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவொரு சேமிப்பு ஆயுள் காப்பீடு திட்டமாகும். இத்திட்டம் சேமிப்பு, பாதுகாப்பு இரண்டையுமே வழங்குகிறது.
Samayam Tamil LIC


இத்திட்டம் பங்குச் சந்தையுடன் தொடர்பில்லாதது என்பதால் பாதுகாப்பான திட்டம். பீமா ரத்னா திட்டத்தின் நோக்கமே, பாலிசி காலத்தில் பாலிசிதாரர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்திற்கு நிதி ஆதரவு வழங்குவதுதான். பாலிசிதாரர் உயிருடன் இருந்துவிட்டால் அவருக்கு குறிப்பிட்ட கால வாரியாக பணம் செலுத்தப்படும்.

இந்த பாலிசியை வாங்குவதற்கு நேரடியாக எல்ஐசி அலுவலகத்துக்கு செல்லலாம். இதுபோக எல்ஐசி ஏஜெண்டுகள், புரோக்கர்கள் வாயிலாகவும் பாலிசியை வாங்கிக்கொள்ளலாம். இத்திட்டத்தின் சில முக்கிய சிறப்பு அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

Savings Account: சேமிப்புக் கணக்குகளுக்கு சேவைக் கட்டணம் உயர்வு.. ஆக்ஸிஸ் பேங்க் அலர்ட்!
பாலிசிதாரர் உயிரிழந்தால்

பாலிசி காலத்தின்போதே பாலிசிதாரர் உயிரிழந்துவிட்டால் அவரது குடும்பத்துக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொகையில் 125% அல்லது ஆண்டு பிரீமியம் ஏழு மடங்காக வழங்கப்படும்.

பாலிசிதாரர் உயிருடன் இருந்தால்

இந்த பாலிசியின் காலம் 15 ஆண்டுகள். இந்தக் காலத்தின்போது 13ஆம் ஆண்டு மற்றும் 14ஆம் ஆண்டின்போது உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொகையில் 25% வழங்கப்படும்.

மெச்சூரிட்டி

திட்டம் மெச்சூரிட்டி பெறும்போது, உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொகை உங்களுக்கு செலுத்தப்படும்.

உத்தரவாதம்

திட்டத்தின் முதல் ஐந்து ஆண்டுகளில், உத்தரவாதத் தொகையில் ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 50 ரூபாய் செலுத்தப்படும். 6 - 10 ஆண்டுகளில் ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 55 ரூபாய் வழங்கப்படும். 11 முதல் 25 ஆண்டுகளில் ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 60 ரூபாய் வழங்கப்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்