ஆப்நகரம்

Insurance Policy Lapse: என்ன செய்ய வேண்டும்?

ஆயுள் காப்பீடு பாலிசிக்கான காலம் தவறிவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

Samayam Tamil 6 Sep 2020, 2:39 pm
நல்ல நோக்கங்களுடன் ஆயுள் காப்பீடு பாலிசி வாங்கி, பிறகு நிதி நெருக்கடியால் பிரீமியத் தொகை கட்டாமல் தவறியிருக்க அதிக வாய்ப்புண்டு. இந்த தவறை நம்மில் பலர் செய்திருப்போம். காலை வேண்டாம், காலம் தவறிய பாலிசியை (policy lapse) மீண்டும் புதுப்பிக்க முடியும்.
Samayam Tamil ஆயுள் காப்பீடு


ஆயுள் காப்பீடு பாலிசி வாங்கும்போது பல்வேறு அளவீடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதில் பாலிசிதாரரின் வயது, பாலினம், தற்போதைய உடல்நிலை, வாழ்வியல் முறை, குடும்ப மருத்துவ ரெக்கார்ட் உள்ளிட்டவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

Income Tax: நீங்கள் செய்யக்கூடாத தவறுகளின் லிஸ்ட்

குறைந்த வயதில் இருப்போர், நோய் வரலாறு இல்லாமல் இருப்போர் ரிஸ்க் குறைவானவர்களாக கருதப்படுகின்றனர். இவர்கள் குறைந்த பிரீமியம் செலுத்தினால் போதுமானது. எனவே, காலம் தவறிய பாலிசியை புதுப்பிக்காவிட்டால் உங்கள் உழைப்பு அனைத்தும் வீணாகிவிடும்.

முக்கியமாக, கொரோனா கொள்ளை நோய் காலத்தில் மக்கள் காப்பீடுகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே, அவசர பாதுகாப்பு கருதி உங்களது காலம் தவறிய பாலிசியை மீண்டும் புதுப்பிப்பதே நல்ல சாய்ஸ். சிலர் பாலிசி தவறியதற்காக புதிய பாலிசி போடுவார்கள். இது அவசியமற்றது.

பழைய பாலிசியை புதுப்பிப்பதால் கூடுதல் பயன்களும் இருக்கின்றன. பழைய பிரீமியத் தொகை, முன்பு கிடைத்த போனஸ் என அனைத்தையும் மீண்டும் பெற முடியும். எல்ஐசி பாலிசிகளை பொறுத்தவரை காலம் தவறிய பாலிசிகளை மீண்டும் புதுப்பிக்க ஐந்து ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்