ஆப்நகரம்

ஆதாரை இணைத்தால் ரூ.1.3 லட்சம் கிடைக்கும்... மத்திய அரசின் திட்டம்!

ஜன் தன் வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைத்தால் ரூ.1.3 லட்சம் வரையில் பயன்பெறலாம்.

Samayam Tamil 30 Dec 2021, 5:49 pm
நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கிச் சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த ஜன் தன் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக அபராதமும் வசூலிக்கப்படாது. இதுபோன்ற நிறைய சலுகைகள் ஜன் தன் வங்கிக் கணக்கில் கிடைக்கின்றன.
Samayam Tamil jan dhan aadhaar


ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூபே கார்டுகள் வழங்கப்படுகின்றன. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரையில் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. 2018 ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குப் பிறகு ஜன் தன் கணக்கு திறந்தவர்களுக்கு இச்சலுகை கிடைக்கும். இதுமட்டுமல்லாமல் பொது காப்பீடாக ரூ.30,000 கிடைக்கிறது.

அரசு ஊழியர்களுக்கு ரூ.2 லட்சம்... புத்தாண்டில் ஜாக்பாட்!

ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த ரூ.1.3 லட்சம் வரையிலான பலன்களைப் பெறுவதற்கு ஒரு நிபந்தனை உள்ளது. அவர்கள் தங்களது ஆதார் கார்டை ஜன் தன் வங்கிக் கணக்குடன் இணைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் கிடைக்காது. ஆதார் கார்டில் பதிவு செய்த மொபைல் நம்பரும் இதற்கு தேவைப்படும். மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி எண்ணைப் பதிவிட வேண்டியிருக்கும்.

ஜன் தன் வங்கிக் கணக்கில் ஓவர் டிராஃப்ட் வசதியும் உள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ரூ.10,000 வரையில் பணம் எடுத்துக் கொள்ளலாம். ஜன் தன் திட்டம் வந்த பிறகு பெண்கள் அதிகளவில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்