ஆப்நகரம்

பொதுமக்களுக்கு எச்சரிக்கை.. 1000 ரூபாய் அபராதம்!!

பான் கார்டை ஆதாருடன் இணைக்காவிட்டால் 1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்... ஒரு நாள்தான் டைம்.

Samayam Tamil 31 Mar 2022, 6:55 am
பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான கால அவகாசமும் பலமுறை நீட்டிக்கப்பட்டது. கடைசியாக வெளியான அறிவிப்பின்படி, 2022 மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும். இந்த கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது. அதற்குள் இணைத்துவிட்டால் நல்லது.
Samayam Tamil aadhaar pan link


பான் கார்டு என்பது தனிமனிதனின் பணப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கவும் நிதி மோசடிகளைத் தடுக்கவும் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகும். இதை வெறும் அடையாள அட்டையாக மட்டும் நினைக்கக் கூடாது. பெரிய அளவில் பணப் பரிவர்த்தனை செய்யும் போதோ, நகை வாங்கும்போதோ பான் கார்டு விவரங்கள் வழங்கப்பட வேண்டும்.

கால அவகாசம் முடிவதற்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்காவிட்டால் அந்த பான் கார்டு செயலிழந்துவிடும். அதேபோல, 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இதுமட்டுமல்லாமல், வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது பான் கார்டை இணைக்காவிட்டால் அவர்கள் வங்கிச் சேவைகளைத் தொடர்ந்து பெறுவதில் சிக்கல் ஏற்படும். இதுகுறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளும் எச்சரித்துள்ளன.

பான் கார்டை ஆதாருடன் இணைப்பது எப்படி?

வருமான வரித் துறையின் https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற வெப்சைட்டில் சென்று சுலபமாக இவை இரண்டையும் இணைத்துவிடலாம். ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் இருந்தாலே போதும்.

SMS மூலமாகவும் நீங்கள் இணைக்கலாம்.

பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு UIDPAN <12 இலக்க ஆதார் எண்> <10 இலக்க PAN எண்> என டைப் செய்து SMS அனுப்ப வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்