ஆப்நகரம்

தமிழகத்தில் குவியும் கொரோனா நிவாரண நிதி!

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.306 கோடிக்கு மேல் உதவி வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 1 May 2020, 9:39 pm
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இதுவரையில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2,323 பேருக்குக் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசோடு இணைந்து தமிழக அரசும் தீவிரமாகப் போராடி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டு, நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா நிவாரணப் பணிகளுக்காகத் தமிழக அரசின் பொது நிவாரண நிதியில் பல்வேறு தொழில் நிறுவனங்களும், அரசு அமைப்புகளும், பொதுமக்களும், திரைத் துறையினரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
Samayam Tamil tamil nadu


இந்நிலையில் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியில் செலுத்தப்பட்ட தொகை குறித்த விவரங்களைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 20 வரை, மொத்தம் ரூ.160.93 கோடி வந்திருந்தது. அதன் பின்னர் ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 30 வரையில் ரூ.145.48 கோடி வந்துள்ளது. இதில் அசோக் லேலண்ட் நிறுவனம் ரூ.2.75 கோடி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ரூ.1.65 கோடி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் ரூ.1.2 கோடி, டி.வி.எஸ் ஸ்ரீ சக்கரா லிமிடெட் ரூ.1 கோடி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளம் ரூ.97.65 லட்சம், சேஷசாயி பேப்பர் & போர்ட்ஸ் லிமிடெட் ரூ.62 லட்சம், ஜி.ஆர்.டி. தங்கமாளிகை ரூ.54 லட்சம், மேட்ரிமோனி டாட் காம் ரூ.50 லட்சம், வ.ஊ.சி துறைமுகம், தூத்துக்குடி 50 லட்சம் என்ற அளவில் நிதியுதவி புதிதாக வந்துள்ளது.

ஊரடங்கு... வர்த்தகர்களுக்காக புதிய ஆன்லைன் சந்தை வந்தாச்சு!

கடந்த பத்து நாட்களில் மட்டும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.160.30 கோடி வந்துள்ளது.
பல்வேறு தரப்பினரிடமிருந்து இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை ரூ.306.42 கோடியாகும். நிவாரண நிதி அளித்த நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், அரசு சார் நிறுவன ஊழியர்களுக்கும் தமிழக முதல்வர் நன்றி தெரிவிப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்