ஆப்நகரம்

கொரோனாவால் இந்த வேலைகளுக்கெல்லாம் ஆபத்து இல்லை!

கொரோனா நெருக்கடி காலத்தில் ஆபத்து குறைவான வேலைவாய்ப்புகளின் பட்டியலை பார்க்கலாம்.

Samayam Tamil 24 Jun 2020, 3:36 pm
கொரோனா பாதிப்பால் ஏராளமானோர் வேலைவாய்ப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். ஏற்கெனவே வேலைவாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தவர்கள் கூடுதல் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், வேலை செய்து வந்தவர்களிலும் ஏராளமானோர் வேலைகளை இழந்துள்ளனர்.
Samayam Tamil list of jobs that covid 19 crisis cannot impact
கொரோனாவால் இந்த வேலைகளுக்கெல்லாம் ஆபத்து இல்லை!


ஊழியர்களில் ஒரு பகுதியினரின் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதால் அவர்களும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். கொரோனா போன்ற நெருக்கடி காலங்களிலும், பொருளாதார வீழ்ச்சி போன்ற சூழல்களிலும் சில பாதுகாப்பான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. அவற்றின் பட்டியலை பார்க்கலாம்.

மருத்துவ ஊழியர்கள்

கொரோனா பாதிப்பால் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதை சமாளிப்பதற்காக மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், செவிலியர்களின் தேவை அதிகரித்துக்கொண்டே போகிறதே தவிர குறையவில்லை. இதுமட்டுமல்லாமல், அரபு நாடுகள் விடுத்த சிறப்பு கோரிக்கையின் அடிப்படையில், இந்தியாவிலிருந்து செவிலியர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். எனவே, மருத்துவ ஊழியர்களுக்கு எந்தக் காலத்திலும் தேவை உண்டு.

மனநல மருத்துவர்கள்

கொரோனா பாதிப்பால் உடல் நோய்களால் அவதிப்படும் மக்கள் ஒருபுறமிருக்க, ஊரடங்கால் தனிமை, பதற்றம், மன உளைச்சல் போன்ற சிக்கல்களை ஏராளமானோர் சந்தித்து வருகின்றனர். ஊரடங்கால் மக்கள் மன உளைச்சலை சந்திப்பதை ஐநாவும் ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் அண்மையில் தற்கொலைகள் அதிகரித்து வருவதையும் பார்க்கிறோம். எனவே, மனநல மருத்துவர்களுக்கான தேவையும் முக்கியமானதாக இருக்கிறது.

ஆடிட்டர் & அக்கவுண்டண்ட்

சாதாரண காலத்திலும் சரி, கொரோனா போன்ற நெருக்கடி காலங்களிலும் சரி, அனைவரும் வரி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டியது அவசியமாக இருக்கிறது. சிலரால் தன்னிச்சையாக வரி ரிட்டன் தாக்கல் செய்ய முடியும். எனினும், பெருமாபாலானோர் வரி ரிட்டன் தாக்கல் செய்ய இன்னும் ஆடிட்டர்களையே நம்பியிருக்கின்றனர்.

பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் காலங்களிலும் ஆடிட்டர்களுக்கான தேவை அதிகரிப்பதை பார்த்திருக்கிறோம். ஆகவே, எந்தக் காலத்திலும் ஆடிட்டர்கள், கணக்கர்களுக்கு (accountants) தேவை இருக்கும்.

தகவல் தொழில்நுட்பம் (ஐடி)

கொரோனா ஊரடங்கிலும் அனைத்து ஐடி நிறுவனங்களும் முழுவீச்சில் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. ஐடி ஊழியர்கள் தங்களது வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகளையும் ஐடி நிறுவனங்கள் ஏற்படுத்தி தந்திருக்கின்றன. வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கான வாய்ப்பு இருப்பதால், கொரோனா ஐடி துறையை பாதிக்கவில்லை.

மேலும், கொரோனா பாதிப்பை சமாளிக்க தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியிருப்பதால் டிஜிட்டல் தளங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் ஐடி துறை சார்ந்த வேலைவாய்ப்புகளுக்கு டிமாண்ட் இருக்கிறது. பிக் டேடா அனாலிடிக்ஸ், கிளவுட் கம்பியூட்டிங், ஆர்பிஏ, சமூக மற்றும் மொபைல் தளங்கள் ஆகிய துறைகளை சேர்ந்த ஊழியர்களுக்கு அதிக வாய்ப்புண்டு. ஊழியர்கள் டிஜிட்டல் திறன்களில் அதிக கவனம் செலுத்துவது உகந்தது.

சைபர் பாதுகாப்பு

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ரொக்கப் பரிவர்த்தனையை விட டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பயன்பாடு உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா பாதிப்பால் மக்கள் வங்கிகளுக்கும், ஏடிஎம்களுக்கும் செல்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. ஆனால், மக்களின் பணத்தை டிஜிட்டல் முறையிலேயே எப்படி கொள்ளையடிக்கலாம் என ஹேக்கர்கள் காத்திருக்கின்றனர்.

இதுமட்டுமல்லாமல், ஏராளமான நிறுவனங்கள், வங்கிகள், ஐடி நிறுவனங்கள், அரசு அமைப்புகள் தங்களின் தகவல்களை பாதுகாத்துக்கொள்ள சைபர் பாதுகாப்பு வல்லுநர்களின் உதவியை நாடுகின்றனர். ஏற்கெனவே சைபர் பாதுகாப்பு ஊழியர்களுக்கான தேவை உயர்வாக இருந்த நிலையில், கொரோனா காலத்தில் டிமாண்ட் மேலும் அதிகரித்துள்ளது.

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்