ஆப்நகரம்

வங்கிக் கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்.. ரிசர்வ் வங்கி உத்தரவால் பெரும் நிம்மதி!

ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் குறித்து எடுத்த முடிவால் வங்கி கடன் வாங்கியோருக்கு நிம்மதி.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 6 Apr 2023, 10:50 am
வங்கிக் கடன் வாங்கியோருக்கு பெரும் நிம்மதி அளிக்கும் அறிவிப்பை ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த சுமார் ஒரு ஆண்டாக வட்டி தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில், தற்போது வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால், வங்கிக் கடன் வாங்கியோருக்கான மாத இஎம்ஐ (EMI) கட்டணம் உயராது.
Samayam Tamil loan borrowers gets big relief as rbi decides to pause repo rate hikes at 6 50 percent in april 2023 mpc meet
வங்கிக் கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்.. ரிசர்வ் வங்கி உத்தரவால் பெரும் நிம்மதி!


​ரிசர்வ் வங்கி கொள்கை கூட்டம்​

ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூடி ரெப்போ வட்டி விகிதம் உள்ளிட்ட கொள்கை முடிவுகள் எடுக்கப்படும். இவ்வகையில், ஏப்ரல் 3, 5, 6 தேதிகளில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ் தலைமையில் நடைபெற்ற கொள்கை கூட்டம் இன்று முடிவடைந்தது.

​ரெப்போ வட்டி விகிதம்​

கொள்கை கூட்டம் முடிந்ததை தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ் கொள்கை முடிவுகளை வெளியிட்டார். அப்போது ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும், ரெப்போ வட்டி விகிதம் தொடர்ந்து 6.50% ஆக நீடிக்கும் எனவும் தெரிவித்தார்.

​தொடர் வட்டி உயர்வு​

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக 2022 மே மாதம் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4 சதவீதத்தில் இருந்து 4.40 சதவீதமாக உயர்த்தியது. அதன்பிறகு ஒவ்வொரு கொள்கை கூட்டத்திலும் ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தியது ரிசர்வ் வங்கி. கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி 6.50% ஆக உயர்த்தப்பட்டது.

​வங்கிக் கடன் வாங்கியோருக்கு இஎம்ஐ சுமை​

ரெப்போ வட்டி விகிதம் தொடர்ந்து உயர்த்தப்பட்டதால் வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திக்கொண்டே வந்தன. இதனால், ஏற்கெனவே கடன் வாங்கி கடனை செலுத்தி வருவோருக்கும், புதிதாக கடன் வாங்குவோருக்கும் மாத இஎம்ஐ கட்டணம் உயர்ந்து சுமை ஏற்பட்டது.

​கடன் வாங்கியோருக்கு நிம்மதி​

ஏற்கெனவே ரெப்போ வட்டி விகிதம் 6.50% ஆக இருப்பதால் கடன்களுக்கான வட்டி அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், ஏப்ரல் மாதமும் ரிசர்வ் வங்கி கொள்கை கூட்டத்தை உயர்த்தினால் இஎம்ஐ மேலும் அதிகரிக்கும் என கடன் வாங்கியோர் மத்தியில் அச்சம் இருந்தது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை உயர்த்தாமல் விட்டுவிட்டதால் கடன் வாங்கியோருக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்