ஆப்நகரம்

ஒரு சிலிண்டர் விலை ரூ.1800.. பெட்ரோல் 170 ரூபாய்.. இந்த மாநிலத்தின் கதையை கேளுங்க!

மணிப்பூரில் நிலவும் வன்முறையால் சிலிண்டர், பெட்ரோல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 25 May 2023, 3:51 pm
இந்தியாவில் ஏற்கெனவே சிலிண்டர் விலை, பெட்ரோல் விலை எல்லாம் மிக அதிகமாக இருப்பதால் பொதுமக்களுக்கு கடும் சுமை நீடித்து வருகிறது. இந்நிலையில், ஒரு மாநிலத்தில் சிலிண்டர் விலை 1800 ரூபாயாகவும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 170 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
Samayam Tamil lpg cylinder
lpg cylinder


மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மூன்று வாரங்களாக கடுமையான வன்முறை மற்றும் கலவரங்கள் நடப்பதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் அங்கு உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தொடங்கி பெட்ரோல், சிலிண்டர் விலை வரை கடுமையாக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மணிப்பூர் மக்கள் அரிசியை அதிகளவில் விரும்பி சாப்பிடும் சமூகமாக இருக்கின்றனர். இந்நிலையில், மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில் அரிசி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. உதாரணமாக 50 கிலோ சூப்பர்பைன் ரக அரிசி மூட்டை 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது இருமடங்காக 1800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அரிசி மட்டுமல்லாமல் முட்டை, உருளைக் கிழங்கு, வெங்காயம் போன்ற மிக அடிப்படையான உணவு பொருட்களின் விலையும் மணிப்பூரில் தாறுமாறாக உயர்ந்துள்ளது. உதாரணமாக வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விலை சுமார் 20 முதல் 30 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

இதுபோக முட்டை விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு முட்டை 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இப்போது 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோக பொதுவாகவே அனைத்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு பொருட்களின் விலை மணிப்பூரில் கடுமையாக உயர்ந்துள்ளது.

மணிப்பூரின் மேற்கு இம்பால் மாவட்டத்தில் பெட்ரோல், சிலிண்டர் விலை மிக மோசமாக உயர்ந்துள்ளது. ஒரு சிலிண்டர் 1800 ரூபாய்க்கு பிளாக்கில் விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். மேலும் பெட்ரோல் ஒரு லிட்டர் 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறதாம். இதனால் மணிப்பூர் மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்