ஆப்நகரம்

500 ரூபாய்க்கு சிலிண்டர் வாங்கலாம்.. முதல்வர் மாஸ் அறிவிப்பு!

இனி 500 ரூபாய்க்கு நீங்கள் சிலிண்டர் வாங்கலாம்.

Samayam Tamil 22 Feb 2023, 6:33 am
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் அனைவரும் 500 ரூபாய்க்கு சிலிண்டர் வாங்கலாம் என்று ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil lpg cylinder will be available for 500 rupees on this state
500 ரூபாய்க்கு சிலிண்டர் வாங்கலாம்.. முதல்வர் மாஸ் அறிவிப்பு!


சமையல் சிலிண்டர்!

சிலிண்டர் இல்லாத வீடே இல்லை என்று கூறும் அளவுக்கு இந்தியாவில் இப்போது சிலிண்டர் இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் சிலிண்டர் பயன்பாட்டுக்கு மிக வேகமாக மாறி வருகின்றனர். அரசு தரப்பிலும் சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கு ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது.

பட்ஜெட்டில் வந்த செய்தி!

ராஜஸ்தான் மாநில அரசு உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 76 லட்சம் பயனர்களுக்கு சிலிண்டர் விலையை 500 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ராஜஸ்தான் மாநில அரசு 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 10ஆம் தேதி தாக்கல் செய்தது. அப்போது இது தொடர்பான அறிவிப்பு வெளியானது.

500 ரூபாய்க்கு சிலிண்டர்!

கடந்த 2022 டிசம்பர் மாதத்தில், வறுமைக் கோட்டிற்கு (பிபிஎல்) கீழ் வாழும் மக்கள் ஆண்டுதோறும் 12 சிலிண்டர்களை 500 ரூபாய் விலையில் வாங்க அனுமதிக்கப்படுவார்கள் என்று முதல்வர் அசோக் கெலாட் அறிவித்தார். இந்த திட்டத்தில் தீவிரமாக பங்கேற்கும் தகுதியுள்ள குடும்பங்களுக்கு தலா 500 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர்களை அரசு வழங்கும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் கிடைக்காது!

ராஜஸ்தானில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிப்பவர்களுக்கு மட்டுமே எல்பிஜி சிலிண்டர் சலுகை வழங்கப்படுகிறது. தேவையான அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்படும் வரை பலன்கள் வழங்கப்படாது என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பலன்களுக்குத் தகுதிபெற, நீங்கள் ராஜஸ்தானில் வசிப்பவராக இருக்க வேண்டும் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்க வேண்டும்.

என்னென்ன தேவை?

இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க, ஆதார் அட்டை, வருமானச் சான்று, வசிப்பிடச் சான்று, ரேஷன் கார்டு ஆகியவை தேவைப்படும். அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று தேவையான ஆவணங்களை வழங்குவதன் மூலம் இந்த மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

உஜ்வாலா யோஜனா என்றால் என்ன?

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) என்பது பெண்களுக்கு சுத்தமான சமையல் எரிபொருளான எல்பிஜியை வழங்குவதன் மூலம் அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட திட்டமாகும். 2016ஆம் ஆண்டின் மே 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேசத்தில் உள்ள பல்லியாவில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவைத் தொடங்கி வைத்தார். அதன் பிறகு இத்திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்