ஆப்நகரம்

PF கணக்குடன் ஆதார் எண்ணை ஏன் இணைக்கணும்?

கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என இபிஎப்ஓ (Employee Provident Fund Organisation) உத்தரவு பிறப்பித்தது.

Samayam Tamil 9 Jul 2019, 3:30 pm
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதைக் கட்டாயமாக்கிய உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil epfo


கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என இபிஎப்ஓ (Employee Provident Fund Organisation) உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எலிசா எபினேசர் என்ற தனியார் நிறுவன பணியாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

“ஆதார் எண்ணை அரசின் நலத் திட்டங்களுக்கு மட்டுமே கட்டாயமாக்குவதாக கடந்த 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாக, நலத்திட்டம் அல்லாத தொழிலாளர் வைப்பு நிதி கணக்குகளுக்கு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்குவது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது” அவர் தன் மனுவில் குறிப்பிட்டார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, இது குறித்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்