ஆப்நகரம்

போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

பணி ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

Samayam Tamil 25 Sep 2022, 10:06 am
பணி ஓய்வுபெற்ற போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும்படி தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர் பென்சன் நிதி அறக்கட்டளைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil cash


பணி ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும்படி 2012ஆம் ஆண்டில் ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என்பதற்காக, ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் நல சங்கம் சார்பில் 2014ஆம் ஆண்டில் நீதிமன்ற அவமதிப்பு வழங்கு தொடரப்பட்டது.

இம்மனுவை மீண்டும் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இவ்வழக்கு நீதிபதி சத்ய நாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வீட்டுக் கடன் வட்டி உயர்வு.. எல்ஐசி வாடிக்கையாளர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்!
அப்போது, அகவிலைப்படி உயர்வு வழங்குவதில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாக நீதிபதி தெரிவித்தார். அதிகாரிகள் ஏன் இதுபோன்ற மனநிலையுடன் செயல்படுகிறார்கள் எனவும் நீதிபதி கேள்வியெழுப்பினார்.

இதையடுத்து, சுமார் 86,000 ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் பென்சன் நிதி அறக்கட்டளைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரும் நவம்பர் மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்