ஆப்நகரம்

கொரோனாவுக்கு மருந்து... பதஞ்சலிக்குத் தடை!

கொரோனாவைக் குணப்படுத்தும் மருந்து தங்களிடம் உள்ளதாகக் கூறும் பதஞ்சலி நிறுவனத்தின் அம்மருந்தை விற்பனை செய்ய மகாராஷ்டிர மாநில அரசு தடை விதித்துள்ளது.

Samayam Tamil 26 Jun 2020, 3:21 pm
யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத முறையில் மருந்துப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனமும் அதை நிறுவிய பாபா ராம்தேவும் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகிவிட்டது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் சிக்கி அல்லல்பட்டு வரும் சூழலில் தங்களிடம் கொரோனாவுக்கு மருந்து இருப்பதாகச் சமீபத்தில் பதஞ்சலி நிறுவனம் அறிவித்தது. கொரோனாவை அழிக்கக்கூடிய மருந்தைக் கண்டறிய உலகம் முழுவதும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வரும் சூழலில், பதஞ்சலி நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Samayam Tamil coronil


பதஞ்சலி நிறுவனத்தின் ‘கொரோனில்’ என்ற இந்த மருந்தைக் கொரோனா பாதித்தவர்களுக்குக் கொடுத்துச் சோதித்துப் பார்த்ததில் 5 முதல் 14 நாட்களில் கொரோனா பாதிக்கப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட அனைவரும் குணமடைந்ததாக அந்நிறுவனம் கூறியது. ஆனால் இந்த மருந்தைக் கண்டுபிடிக்கத் தாங்கள் அனுமதி எதையும் வழங்கவில்லை என்று உத்தராகண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது. உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள ஆலையில்தான் பதஞ்சலி நிறுவனம் இந்த மருந்தை உற்பத்தி செய்துள்ளது.

வாங்குறாங்க.. ஆனா திருப்பி கட்ட மாட்றாங்க... கதறும் வங்கிகள்!

பதஞ்சலி நிறுவனத்துக்கு நோய் எதிர்ப்புத் திறன் மேம்பாடு, காய்ச்சல், சளி ஆகியவற்றுக்கான மருந்தை உற்பத்தி செய்யவே உரிமம் வழங்கினோம் எனவும், அந்த உரிமத்தை வைத்து கொரோனா தொற்றுக்கு எப்படி மருந்து உற்பத்தி செய்தார்கள் என்று தெரியவில்லை எனவும் உத்தராகண்ட் மாநில ஆயுர்வேதத் துறை தெரிவித்துள்ளது. இதற்கான விளக்கமும் பதஞ்சலி நிறுவனத்திடம் கேட்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனா மருந்துகளுக்கு விளம்பரம் செய்ய ஆயுஷ் அமைச்சகம் தடை விதித்தது.

சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்திய பணம் எவ்வளவு தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்நிலையில் தற்போது, மகாராஷ்டிர மாநிலத்தில் பதஞ்சலியின் கொரோனா மருந்துகளை விற்பனை செய்யவும் அதற்கான விளம்பரம் செய்யவும் அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறுகையில், “இதைப் போன்ற போலியான மருந்துகளை எங்களது மாநிலத்தில் விற்பனை செய்ய அனுமதிக்க மாட்டோம். இதற்கான அனுமதியை அவர்கள் பெறவே இல்லை. ஒருவேளை அவர்கள் கொரோனா மருந்தை விற்பனை செய்யவோ அல்லது அதற்கு விளம்பரம் செய்யவோ முயன்றால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்