ஆப்நகரம்

மொபைல் ஆப் மூலமாகக் கடன் வாங்கலாமா? காத்திருக்கும் ஆபத்து...

மொபைல் ஆப், வெப்சைட் மூலமாக உடனடிக் கடன் வாங்குவதற்கு முன்னால் வாடிக்கையாளர்கள் உஷாராக இருக்கும்படி வங்கிகள் எச்சரிக்கை செய்துள்ளன.

Samayam Tamil 8 Mar 2021, 9:52 pm
திருமணத்துக்காகவோ அல்லது விலையுயர்ந்த பொருட்களை வாங்கவோ அல்லது மற்ற நிதி சார்ந்த தேவைகளுக்கோ பெரும்பாலானோர் கடன் வாங்க விரும்புவார்கள். சிலர் நெருக்கடியான கடனை அடைக்கவும், வீட்டைப் புதுப்பிப்பதற்குக் கூட லோன் வாங்குவார்கள். வங்கிகளில் பெர்சனல் லோன் வாங்குவது மிக எளிதான ஒன்று. தேவையான ஆவணங்கள் சரியாக இருந்தால் ஒரே நாளில்கூட கடன் கிடைத்துவிடும். ஆனால் இப்போது லோன் வாங்க நீங்கள் வங்கிக்குக் கூட அலையத் தேவையில்லை. மொபைல் ஆப் மூலமாகவே லோன் வாங்க முடியும். இவ்வாறாக நிறைய மொபைல் ஆப்கள் இப்போது வந்துவிட்டன.
Samayam Tamil loan


பிரச்சினை என்னவென்றால், இந்த மொபைல் ஆப்கள் உண்மையில் அதிகாரப்பூர்வமானதுதானா என்பதில் சந்தேகம் இருக்கிறது. பண நெருக்கடியில் இது மாதிரியான மொபைல் ஆப்களில் கடன் வாங்க முயற்சித்து, இருக்கும் பணத்தைத் தொலைத்தவர்களும் உண்டு. இது தொடர்பான புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. தனிநபர் தகவல் திருட்டு இதன் மூலமாக அதிகமாக நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது. வங்கிகள் தரப்பிலிருந்தும் வாடிக்கையாளர்களுக்கு இது தொடர்பாகத் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு, விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.

மகளிர் தினம்: ஜன் தன் கணக்கில் பெண்கள் ஆதிக்கம்!

இது போன்ற ஆப்கள், இணையதளங்கள் வாயிலாகக் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர், வாடிக்கையாளர்கள் தங்களது தனிநபர் விவரங்களையும் ஆவணங்களையும் வழங்குவதற்கு முன்னர் அதன் உண்மைத்தன்மையைத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்க வேண்டும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் எச்சரித்துள்ளன. இதுபோன்ற ஆப்கள் வாயிலாகக் கடன் வழங்கும் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெற்றவையா என்று பரிசோதிக்க வேண்டும்.

தனிநபர் ஆவணங்களை வழங்குவதற்கு முன்னர் அவை பாஸ்வேர்டு மூலமாகப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அதேபோல, குறிப்பிட்ட அந்த நிதி நிறுவனம் அல்லது ஆப்கள் குறித்து வாடிக்கையாளர்கள் வழங்கிய review மதிப்பீட்டைப் பார்த்து அதன் நம்பகத்தன்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோல, அந்த ஆப் அல்லது வெப்சைட்டில் உள்ள terms and conditions, privacy policy போன்றவற்றைப் படித்துப் பார்த்துவிட்டு அதன் பின்னர் கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று வங்கிகள் எச்சரித்துள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்