ஆப்நகரம்

கச்சா எண்ணெய் இறக்குமதி... மத்திய அரசின் திட்டம்!

கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 4 Aug 2021, 8:41 pm
இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கான தேவையைப் பூர்த்திசெய்ய இறக்குமதியையே பெருமளவில் சார்ந்திருக்க வேண்டிய சூழலில் இந்தியா இருக்கிறது. உள்நாட்டில் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு போதுமான அளவில் இல்லை என்பதால் இறக்குமதியைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் குறைவாகவே உள்ளன. இதனால் இறக்குமதிக்காக அதிகளவில் செலவு செய்யவேண்டியிருக்கிறது.
Samayam Tamil crude oil


கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க மத்திய அரசு ஏற்கெனவே இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. 2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதித் தேவையை 67 சதவீதமாகக் குறைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதேபோல, 2030ஆம் ஆண்டுக்குள் இறக்குமதிக்காகச் சார்ந்திருக்கும் கச்சா எண்ணெய்யின் அளவைப் பாதியாகக் குறைக்கவும் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு ரூ.2,000... இந்தத் தேதியில்தான் வருது!
மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின் போது இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சர் ரமேஷ்வர் தெலி அளித்துள்ள பதிலில், “எண்ணெய் மற்றும் எரிவாயுவின் இறக்குமதி மீதான சார்பைக் குறைக்கும் இலக்கை அடைவதற்கு மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களுடன் பெட்ரோலியம் அமைச்சகம் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறது. இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் ஆராய்ச்சி & உற்பத்தியை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “எத்தனால் கலந்த பெட்ரோல் மற்றும் டீசலில் உயிரி டீசல் கலப்பு திட்டங்களின் மூலம் எத்தனால் மற்றும் உயிரி டீசல் போன்ற மாற்று எரிபொருட்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது” என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்