ஆப்நகரம்

விஜய் மல்லையா தலைவராக நீடிப்பார்; யுபி நிறுவனம் தகவல்

நிதி மோசடியில் சிக்கியுள்ள விஜய் மல்லையாவே, தங்களது நிறுவனத் தலைவராக தொடர்ந்து நீடிப்பார் என்று, யுபி எனப்படும் யுனைடெட் ப்ரூவரிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

TNN 8 Sep 2016, 2:48 pm
நிதி மோசடியில் சிக்கியுள்ள விஜய் மல்லையாவே, தங்களது நிறுவனத் தலைவராக தொடர்ந்து நீடிப்பார் என்று, யுபி எனப்படும் யுனைடெட் ப்ரூவரிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil mallya to continue as chairman says ub
விஜய் மல்லையா தலைவராக நீடிப்பார்; யுபி நிறுவனம் தகவல்


மதுபான தயாரிப்பில் ஈடுபட்டுள்ள யுனைடெட் ப்ரூவரிஸ், கிங்ஃபிஷ்ஷர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவராக உள்ள விஜய் மல்லையா, நிதி மோசடியில் சிக்கி, லண்டனில் தலைமறைவாக வசித்துவருகிறார். அவரை கைது செய்து, இந்தியா கொண்டுவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான சொத்துகள், வங்கிக் கணக்கு என பலவற்றை மத்திய அரசு முடக்கியபோதிலும், அவரது வர்த்தக நிறுவனங்கள் தொடர்ந்து, செயல்பட்டு வருகின்றன. அதில், யுனைடெட் ப்ரூவரிஸ் நிறுவனம் தொடர்ந்து லாபத்துடன் செயல்படுகிறது.

இந்நிலையில், அதன் தலைவர் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியானது. அதனை மறுத்துள்ள யுனைடெட் ப்ரூவரிஸ் விஜய் மல்லையாவே தலைவர் பதவியில் நீடிப்பார் என்றும், இதற்கு நிறுவனத்தின் பங்குதாரர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்