ஆப்நகரம்

மார்ச் 31 கடைசி நாள்.. அதற்குள் இந்த வேலையை எல்லாம் முடிக்க வேண்டும்!

 பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா, பான் - ஆதார் இணைப்பு, வரி சேமிப்பு, இந்த வேலைகளை முடிக்க மார்ச் 31தான் கடைசி நாள், 

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 2 Mar 2023, 9:34 pm
Pradhan Mantri Vaya Vandana Yojana(PMVVY), PAN Aadhaar linking.. பணம் தொடர்பான இந்த வேலைகளை முடிக்க மார்ச் 31தான் கடைசி நாள்.
Samayam Tamil march 31 is the last day to complete these money related tasks do it immediately
மார்ச் 31 கடைசி நாள்.. அதற்குள் இந்த வேலையை எல்லாம் முடிக்க வேண்டும்!


மார்ச் மாதம்!

மார்ச் மாதம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானது. ஏனெனில் நிதியாண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. எனவே பணம் தொடர்பான நிறைய விஷயங்களில் மார்ச் மாதம் என்பது அனைவருக்கும் முக்கியமானது. நீங்களும் வரியைச் சேமிக்க விரும்பினால், மார்ச் 31ஆம் தேதிக்குள் இந்த வேலைகளை முடிக்க வேண்டும்.

வய வந்தனா யோஜனா!

நீங்களும் மத்திய அரசின் வய வந்தனோ யோஜனா திட்டத்தில் பணத்தை முதலீடு செய்ய நினைத்தால், இதுவே உங்களுக்கான கடைசி வாய்ப்பு. இத்திட்டம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதில், அரசிடம் இருந்து ஓய்வூதியம் கிடைக்கிறது. இந்தத் திட்டம் மார்ச் 31க்குப் பிறகு முடிவடையும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. எனவே நீங்கள் மார்ச் மாதம் முடிவதற்குள் இதில் முதலீடு செய்யலாம்.

பான் - ஆதார் இணைப்பு!

பான் எண்ணை ஆதாருடன் இணைக்க உங்களுக்கு மார்ச் 31 வரை மட்டுமே அவகாசம் உள்ளது. இதை நீங்கள் தாமதமாகச் செலுத்தினால் அபராதம் செலுத்த வேண்டும். ஆனால் மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைக்காவிட்டால் நீங்கள் வருமான வரி செலுத்த முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வரி சேமிப்பு!

நிதியாண்டில் வரியைச் சேமிக்கத் திட்டமிடுவதற்கான கடைசி வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. இதற்குப் பிறகு, நீங்கள் ஏதேனும் வரிச் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்தால், அதன் மீதான விலக்கின் பலன் உங்களுக்குக் கிடைக்காது. PPF, NPS, செல்வ மகள் திட்டம் போன்ற பல திட்டங்களில் பணத்தை முதலீடு செய்யலாம்.

இன்சூரன்ஸ் பாலிசி!

5 லட்சத்துக்கும் மேலான வருடாந்திர பிரீமியம் கொண்ட எல்ஐசி பாலிசிக்கு இனி வரி விலக்கு பலன் கிடைக்காது. இது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தகவல் தெரிவித்துள்ளார். இந்த விதி 2023 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.

மியூச்சுவல் ஃபண்ட்!

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் நீங்கள் இன்னும் நாமினேசன் செய்யவில்லை என்றால், மார்ச் 31 ஆம் தேதிக்குள் இந்தப் பணியையும் முடிக்க வேண்டும். இதைப் புதுப்பிக்குமாறு அனைத்து முதலீட்டாளர்களையும் ஃபண்ட் ஹவுஸ் கேட்டுக் கொண்டுள்ளது. நீங்கள் நாமினேசன் செய்யவில்லை என்றால், உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முடக்கப்படும். எனவே மார்ச் 31க்குள் இந்தப் வேலையை முடிக்க வேண்டும்.

எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்