ஆப்நகரம்

கொரோனாவால் தொழில் துறை உற்பத்தி வீழ்ச்சி!

மார்ச் மாதத்தில் இந்தியாவின் உள்கட்டுமானத் துறை உற்பத்தியில் 6.5 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 30 Apr 2020, 8:40 pm
இந்தியாவில் உள்ள நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலியம், உரம், எஃகு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகிய எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி குறித்த விவரங்களை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி, மார்ச் மாதத்துக்கான உள்கட்டுமானத் துறை உற்பத்தியில் 6.5 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. கொரோனா பீதியால் கடந்த மாதத் தொடக்கத்திலேயே தேவை குறைவு ஏற்பட்டு உற்பத்தியில் பின்னடைவு ஏற்பட்டது. மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடைசி வாரத்தில் தொழில் துறை உற்பத்தி முற்றிலும் முடங்கிவிட்டது.
Samayam Tamil production


2019 மார்ச் மாதத்தில் கூட தொழில் துறை உற்பத்தியில் 5.8 சதவீத வளர்ச்சி காணப்பட்டது. இந்த ஆண்டின் மார்ச் மாதத்துக்கான உள்கட்டுமானத் துறைகளில் சிமெண்ட் உற்பத்தியில் மிக மோசமாக 24.7 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, இயற்கை எரிவாயு உற்பத்தி 15.2 சதவீதமும், எஃகு உற்பத்தி 13 சதவீதமும், உரம் உற்பத்தி 11.9 சதவீதமும், மின்சாரம் உற்பத்தி 7.2 சதவீதமும், கச்சா எண்ணெய் உற்பத்தி 5.5 சதவீதமும், சுத்திகரிப்புப் பொருட்கள் உற்பத்தி 0.5 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஊரடங்கு முடிந்தபின் கார் வாங்க மக்கள் ஆர்வம்... காரணம் இதுதான்!

நிலக்கரி உற்பத்தியில் மட்டுமே 4.1 சதவீத வளர்ச்சி மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது. 2019 மார்ச் மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 9.1 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. 2019-20 நிதியாண்டின் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான மாதங்களில் இந்தியாவின் உள்கட்டுமானத் துறை உற்பத்தி 0.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. 2018-19ஆம் ஆண்டில் இதன் வளர்ச்சி 4.4 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்