ஆப்நகரம்

தொடர் வீழ்ச்சியில் இந்தியப் பங்குச்சந்தை; சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

புதுடெல்லி: கடந்த சில நாட்களாக தொடர் சரிவில் பங்குச்சந்தைகள் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.

TIMESOFINDIA.COM 4 Oct 2018, 7:07 pm
கச்சா எண்ணெய் விலை, சர்வதேச அளவில் நலிவடைந்த பங்குச்சந்தை உள்ளிட்டவை காரணமாக ரூபாயின் மதிப்பு மீண்டும் ஒரு வீழ்ச்சியை கண்டுள்ளது. இந்நிலையில் இன்றைய பங்குவர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 806 புள்ளிகள் சரிந்து, 35,169 புள்ளிகளிலும், நிஃப்டி 259 புள்ளிகள் குறைந்து, 10,599 புள்ளிகளிலும் நிறைவடைந்தன.
Samayam Tamil Sensex


பிஎஸ்சி மற்றும் என்.எஸ்.சியின் குறியீடுகள் 2%க்கும் அதிகமாக சரிந்துள்ளன. ஓ.என்.ஜி.சி, ரிலையன்ஸ் நிறுவனம், ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்டவை மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்துள்ளன.

இவற்றின் பி.எஸ்.சி குறியீடு 7.03% அளவிற்கு குறைந்துள்ளன. என்.எஸ்.சியைப் பொறுத்தவரை நிஃப்டி பார்மா, ஐடி, எப்.எம்.சி.ஜி ஆகியவை மோசமான நஷ்டத்தைக் கண்டுள்ளன.

இவற்றின் குறியீடுகள் 3.22% அளவிற்கு குறைந்துள்ளன. ரூபாய் மதிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலையில் எந்தவொரு நிலைத்தன்மையும் ஏற்படுவதற்கான அறிகுறிகள் இல்லை.

எனவே வரும் காலங்களிலும் மிக மோசமான நிலையில் இருக்கும் என்று பங்குச்சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Market bloodbath Sensex sheds 806 points; Nifty closes below 11,600.

அடுத்த செய்தி

டிரெண்டிங்