ஆப்நகரம்

மீண்டும் உச்சத்திற்கு சென்ற சென்செக்ஸ், நிப்டி!!

இன்றைய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் வரலாற்று சாதனையாக 35,500 புள்ளிகளையும், நிப்டி 10,900 புள்ளிகளையும் தொட்டன.

Samayam Tamil 19 Jan 2018, 5:45 pm
இன்றைய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் வரலாற்று சாதனையாக 35,500 புள்ளிகளையும், நிப்டி 10,900 புள்ளிகளையும் தொட்டன.
Samayam Tamil markets close at record highs sensex above 35500 mark nifty at 10894
மீண்டும் உச்சத்திற்கு சென்ற சென்செக்ஸ், நிப்டி!!


இந்த வாரத்தின் முடிவில் இன்று ஒரு நாள் மட்டும் 251 புள்ளிகள் அதிகரித்து சென்செக்ஸ் 35,500 புள்ளிகளைத் தொட்டது. நேற்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பின்னர் சில பொருட்களின் மீதான வரியை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் சில பொருட்களின் மீதான வரியை குறைத்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் இன்றைய பங்குச் சந்தை உயர்ந்து காணப்பட்டது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்தனர்.

ஜிஎஸ்டியில் செய்யப்பட்ட வரி குறைப்பின் மூலம் சந்தையில் மாற்றம் ஏற்பட்டு, சமநிலைப்பாடு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இன்னும் பட்ஜெட்டில் வருமான வரி குறைப்பு ஏற்படும் பட்சத்தில் மேலும் சந்தையில் உற்சாகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 919.19 புள்ளிகள், அதாவது 2.65% அதிகரித்துள்ளது. நிப்டி 213.45 புள்ளிகள், அதாவது 1.99% அதிகரித்துள்ளது. அதானி போர்ட்ஸ், எஸ்பிஐ, எஸ் வங்கி, ஐசிஐசிஐ ஆகிவற்றின் பங்குகள் அதிகரித்து காணப்பட்டன. இன்போசிஸ், சன் பார்மா ஆகிவற்றின் பங்குகள் குறைந்து காணப்பட்டன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்