புதன்கிழமை முடிவடைந்த இந்திய பங்குச்சந்தைகள் பெரிய அளவில் மாற்றம் இன்றி காணப்பட்டன.
சர்வதேச காரணங்கள் ஒருபுறம் இருந்தாலும், உள்நாட்டு பொருளாதார காரணங்களே, இன்றைய வர்த்தகத்தில் பங்குச்சந்தைகளின் முதலீடை பாதிப்பதாக அமைந்தது. அடுத்த மாத தொடக்கத்தில் ரிசர்வ் வங்கியின் இடைக்கால நிதியறிக்கை வெளியாக உள்ளது. உர்ஜித் படேலின் தலைமையில் ரிசர்வ் வங்கி வெளியிடும் முதல் நிதிக்கொள்கை அறிவிப்பு என்பதால், வட்டிவிகிதங்கள் குறைக்கப்படலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்காரணமாக, பங்குச்சந்தைகளில் வர்த்தகம் தொடக்கத்தில் முதலீடு அதிகரித்துக் காணப்பட்டது. எனினும், ஆகஸ்ட் மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் அதிகரித்துள்ளதாக, பிற்பகலில் தகவல் வெளியானது. இது, முதலீட்டாளர்களின் பங்கு வாங்கும் ஆர்வத்தைக் குறைப்பதாக அமைந்தது. இதனால், வர்த்தகம் முடியும் வரை, பங்குச்சந்தைகளில் ஏற்ற, இறக்கம் கலந்தே காணப்பட்டது.
முன்னணி நிறுவனப் பங்குகள் மட்டுமின்றி சிறிய, நடுத்தர நிறுவனப் பங்குகளின் விலை உயர்வும் ஓரளவு கட்டுக்குள் நீடித்தது. வங்கி, நுகர்பொருட்கள் துறைசார்ந்த பங்குகள் குறிப்பிடத்தகுந்த விலை உயர்வை சந்தித்தன.
வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 19 புள்ளிகள் உயர்வுடன் 28,372 புள்ளிகளாக நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 11 புள்ளிகள் அதிகரித்து, 8,727 புள்ளிகளாகவும் முடிந்தது.
சர்வதேச காரணங்கள் ஒருபுறம் இருந்தாலும், உள்நாட்டு பொருளாதார காரணங்களே, இன்றைய வர்த்தகத்தில் பங்குச்சந்தைகளின் முதலீடை பாதிப்பதாக அமைந்தது. அடுத்த மாத தொடக்கத்தில் ரிசர்வ் வங்கியின் இடைக்கால நிதியறிக்கை வெளியாக உள்ளது. உர்ஜித் படேலின் தலைமையில் ரிசர்வ் வங்கி வெளியிடும் முதல் நிதிக்கொள்கை அறிவிப்பு என்பதால், வட்டிவிகிதங்கள் குறைக்கப்படலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்காரணமாக, பங்குச்சந்தைகளில் வர்த்தகம் தொடக்கத்தில் முதலீடு அதிகரித்துக் காணப்பட்டது. எனினும், ஆகஸ்ட் மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் அதிகரித்துள்ளதாக, பிற்பகலில் தகவல் வெளியானது. இது, முதலீட்டாளர்களின் பங்கு வாங்கும் ஆர்வத்தைக் குறைப்பதாக அமைந்தது. இதனால், வர்த்தகம் முடியும் வரை, பங்குச்சந்தைகளில் ஏற்ற, இறக்கம் கலந்தே காணப்பட்டது.
முன்னணி நிறுவனப் பங்குகள் மட்டுமின்றி சிறிய, நடுத்தர நிறுவனப் பங்குகளின் விலை உயர்வும் ஓரளவு கட்டுக்குள் நீடித்தது. வங்கி, நுகர்பொருட்கள் துறைசார்ந்த பங்குகள் குறிப்பிடத்தகுந்த விலை உயர்வை சந்தித்தன.
வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 19 புள்ளிகள் உயர்வுடன் 28,372 புள்ளிகளாக நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 11 புள்ளிகள் அதிகரித்து, 8,727 புள்ளிகளாகவும் முடிந்தது.