ஆப்நகரம்

பங்குச்சந்தைகளில் உயர்வு

வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கள்கிழமை, இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடித்துள்ளன.

TOI Contributor 14 Mar 2016, 4:41 pm
வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கள்கிழமை, இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடித்துள்ளன.
Samayam Tamil markets end higher on rate cut hopes
பங்குச்சந்தைகளில் உயர்வு


உள்நாட்டில், ஆலை உற்பத்திப் பணிகள் சரிவடைந்துள்ளன. நிறுவனங்களின் தொழில் வளர்ச்சி நடவடிக்கைகளும் எதிர்பார்த்தபடி இல்லை. இதனை ஊக்குவிக்கும் விதமாக, வரும் நாட்களில் ரிசர்வ் வங்கி வட்டிவிகிதத்தை குறைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வுடன் உள்ளது. அத்துடன், நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பல பொருளாதார சீர்திருத்த மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றும் என, முதலீட்டாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதுபோன்ற காரணங்களால், திங்கள்கிழமை பங்கு வர்த்தகத்தில் முதலீடு அதிகரித்துக் காணப்பட்டது. முன்னணி நிறுவனப் பங்குகள் மட்டுமின்றி,சிறிய, நடுத்தர நிறுவனப் பங்குகளும் விலை அதிகரித்திருந்ததால், பங்குச்சந்தைகள் உயர்வுடன் காணப்பட்டன.

வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 86 புள்ளிகள் அதிகரித்து, 24,804 புள்ளிகளாக நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 28 புள்ளிகள் உயர்வுடன், 7,538 ஆக முடிவடைந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்