ஆப்நகரம்

பங்குச்சந்தைகளில் உயர்வு

வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தை முடித்துள்ளன.

TNN 19 Sep 2016, 5:34 pm
வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தை முடித்துள்ளன.
Samayam Tamil markets remain range bound
பங்குச்சந்தைகளில் உயர்வு


முந்தைய நாள் முடிந்த அமெரிக்க பங்குச்சந்தைகள் உயர்வுன் இருந்தன. இன்று தொடங்கிய ஆசிய பங்குச்சந்தைகளும் ஏற்றத்தில் காணப்பட்டன. இந்நிலையில், இந்திய பங்குச்சந்தைகளும் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கின.

உள்நாட்டில் நிலவும் சாதகமான பொருளாதார காரணங்களால், அந்நிய முதலீட்டாளர்கள், இந்திய சந்தைகளில் ஆர்வத்துடன் முதலீடு செய்துவருகின்றனர். இதனால், முன்னணி நிறுவனப் பங்குகள் மட்டுமின்றி, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனப் பங்குகளும் விலை உயர்வை சந்தித்தன.

தனிப்பட்ட நிறுவனங்களில், ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, ஆக்சிஸ் வங்கி, ரேமண்ட்ஸ் போன்றவை அதிகபட்ச அளவுக்கு விலை அதிகரித்தன. அதேசமயம், மாருதி சுசூகி, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் விலை குறைந்தும் இருந்தன.

வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 35 புள்ளிகள் அதிகரித்து, 28,634 புள்ளிகளாக நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 26 புள்ளிகள் உயர்வுடன் 8,808 புள்ளிகளாக முடிந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்