ஆப்நகரம்

பங்குச்சந்தைகளில் மீண்டும் சரிவு

கடந்த 3 நாட்களாக உயர்வுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள், வியாழக்கிழமை வர்த்தகத்தில், மீண்டும் சரிவுடன் முடிந்துள்ளன.

TNN 1 Sep 2016, 4:26 pm
கடந்த 3 நாட்களாக உயர்வுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள், வியாழக்கிழமை வர்த்தகத்தில், மீண்டும் சரிவுடன் முடிந்துள்ளன.
Samayam Tamil markets snap 3 day winning streak as telcos trip
பங்குச்சந்தைகளில் மீண்டும் சரிவு


சீனாவில் ஆலை உற்பத்தி நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளதாக, தகவல் வெளியானது. இதனால், ஆசிய பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்தன. இதேபோன்று, ஐரோப்பிய பங்குச்சந்தைகளும் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கின. உள்நாட்டில், ஆலை உற்பத்தி குறித்த பிஎம்ஐ குறியீடு கடந்த 13 மாதங்களின் அதிகபட்ச மதிப்பில் உள்ளதாகக் கூறப்பட்டது.

இதனால், இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கின. மாருதி சுசூகி போன்ற கார் நிறுவனங்கள், ஆகஸ்ட் மாத விற்பனை விவரத்தை வெளியிட்டன. இவை வளர்ச்சியுடன் இருப்பதாகக் கூறப்பட்டது. வர்த்தகத்தின் இடையே, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், கட்டணமில்லா ரோமிங் சேவைகளுடன் 4ஜி சேவையை வழங்க உள்ளதாக, அதன் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்தார்.

இது, இந்திய தொலைத்தொடர்பு சந்தை விதிமுறைகளை மீறிய செயல் என்று, ஏர்டெல் போன்ற போட்டி நிறுவனங்கள் அதிருப்தி தெரிவித்தன. இதையடுத்து, தொலைத்தொடர்புத் துறை சார்ந்த பங்குகளை அதிகளவில் விற்று, முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்தனர். இதனால், அத்துறை பங்குகளில் அதீத விலை சரிவு ஏற்பட்டது.

ஏர்டெல், ஐடியா செல்லுலர் போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனப் பங்குகள் 10% விலை சரிவை சந்தித்தன. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்கு விலையும் கணிசமாகக் குறைந்தது. இது மட்டுமின்றி, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனப் பங்குகளும் விலை குறைந்தன.

இதையடுத்து, பங்குச்சந்தைகளின் வர்த்தகம் பாதித்து, சரிவுக்கு வந்தது. வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 29 புள்ளிகள் குறைந்து, 28,423 புள்ளிகளாக நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 12 புள்ளிகள் குறைந்து, 8,774 ஆகவும் முடிந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்