ஆப்நகரம்

இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு

கடந்த 5 நாட்களாக உயர்வுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள், இன்றைய வர்த்தகத்தில் சரிவுடன் முடிந்துள்ளன.

TNN 31 May 2016, 5:48 pm
கடந்த 5 நாட்களாக உயர்வுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள், இன்றைய வர்த்தகத்தில் சரிவுடன் முடிந்துள்ளன.
Samayam Tamil markets snap 5 day winning streak nifty holds 8150
இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு


சர்வதேச பங்குச்சந்தைகளில் ஏற்ற, இறக்கம் கலந்து காணப்பட்ட நிலையில், உள்நாட்டில் முன்னணி நிறுவனங்களின் மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகள் சந்தைகளின் போக்கை பெரிதும் பாதித்தன. குறிப்பாக, சன் ஃபார்மா நிறுவனத்தின் காலாண்டு நிதிநிலை அறிக்கை முதலீட்டாளர்களை ஏமாற்றம் காணச் செய்தது.

அத்துடன், கடந்த மார்ச்சுடன் முடிவடைந்த நான்காம் காலாண்டுக்கான ஜிடிபி அதாவது உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி அறிக்கையை மத்திய அரசு வெளியிட உள்ளது. அதன் எதிர்பார்ப்பிலும் முதலீட்டாளர்கள் பங்கு விற்பனையில் கவனம் செலுத்தத் தொடங்கினர். முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை சரிந்ததால், சந்தைகள் சரிவுடன் முடிந்தன.

வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 58 புள்ளிகள் சரிவடைந்து, 26,668 புள்ளிகளாக நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 18 புள்ளிகள் குறைந்து, 8,160 புள்ளிகளாக முடிந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்