ஆப்நகரம்

கார் ஓனர்கள் கவனத்துக்கு... ஃபிரீயா ரிப்பேர் பண்ணி தருவதாக மாருதி அறிவிப்பு!

நிறுவனம் சார்பாகவே கோளாறுகளை பழுதுபார்த்துத் தருவதற்காக 1.34 லட்சம் கார்களைத் திரும்பப் பெறுவதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 15 Jul 2020, 1:24 pm
இந்தியாவின் கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு கார்களைத் தயாரித்து இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் வேகன் ஆர், பலேனோ மாடல் கார்களில் அடிக்கடி கோளாறுகள் ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருந்தன. எரிபொருள் பம்ப்களில் குறைபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து குறைபாடு உள்ள கார்களை சரிசெய்து தருவதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது.
Samayam Tamil car


இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் கொள்கையின் படி, அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் தாமாகவே முன்வந்து வாகனங்களில் ஏற்படும் கோளாறுகளை இலவசமாகவே சரிசெய்து வருகின்றன. அந்த வகையில் இப்போது மாருதி சுஸுகி நிறுவனம் தனது வேகன் ஆர் மற்றும் பலேனோ மாடல் கார்களில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பம்ப் கோளாறுகளை சரிசெய்து தரவுள்ளது. மொத்தம் 1,34,885 கார்கள் திரும்பப் பெறப்படவுள்ளன.

Gold Rate in Chennai: நகை வாங்குறவங்களை கடன் வாங்க வைக்கும் தங்கம்!

இதுகுறித்து மாருதி சுஸுகி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2018 நவம்பர் 15ஆம் தேதி முதல் 2019 அக்டோபர் 19ஆம் தேதி வரையில் உற்பத்தி செய்யப்பட்ட வேகன் ஆர் கார்களும், 2019 ஜனவரி 8 முதல் 2019 அக்டோபர் 15 வரையில் உற்பத்தி செய்யப்பட்ட பலேனோ (பெட்ரோல்) கார்களும் திரும்பப் பெறப்பட்டு இலவசமாகவே சரிசெய்து தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கார் ஓனர்களுக்கு நிறுவனத்தின் டீலர்கள் சார்பாகத் தொடர்புகொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்