ஆப்நகரம்

கார் விலை உயர்வு: மாருதி சுஸுகி அறிவிப்பு!

உற்பத்தி செலவு அதிகரிப்பால் கார் விலையை உயர்த்தப்போவதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 18 Jan 2021, 8:19 pm
சென்ற ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து வேலையின்மை மற்றும் சம்பளப் பிரச்சினையால் நிதி நெருக்கடி நிலவியதால் கார் வாங்கும் எண்ணத்தைப் பலர் கைவிட்டனர். பண்டிகைக் காலத்தில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டதால் கார் விற்பனை மீண்டும் சூடுபிடித்தது. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ஜனவரி முதல் கார்களின் விலையை உயர்த்துவதாக நிறுவனங்கள் அறிவித்தன. இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனம்தான் முதன்முதலில் விலை உயர்வை அறிவித்தது.
Samayam Tamil car


கார் உற்பத்திக்கான செலவுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால்தான் அதன் சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தும் வகையில் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் விலை உயர்வு அறிவிப்பை மாருதி சுஸுகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அனைத்து வகை மாடல்களின் விலையும் மாடல்களைப் பொறுத்து விலை உயர்த்தப்படும் என்று மாருதி சுஸுகி அறிவித்துள்ளது. சென்ற ஆண்டின் இறுதியில் மாருதி சுஸுகியைத் தொடர்ந்து ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக ஜனவரி 1 முதல் கார்களின் விலை உயர்த்தப்படும் என்று அறிவித்தன.

இந்நிலையில் தற்போது மாருதி சுஸுகி மீண்டும் விலை உயர்வை அறிவித்துள்ள நிலையில் மற்ற நிறுவனங்களும் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மகிந்திரா & மகிந்திரா நிறுவனம் தனது வாகனங்களின் விலையை 1.9 சதவீதம் வரையில் உயர்த்துவதாக அறிவித்திருந்தது. மாருதி நிறுவனம் தனது கார்களின் விலையில் அதிகபட்சம் ரூ.34,000 வரையில் உயர்த்தப்படுகிறது. கடந்த முறை வெளியான அறிவிப்பில் 4.7 சதவீதம் வரையில் கார்களின் விலையை உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்