ஆப்நகரம்

கார் விலை உயரப் போகுது... மாருதி சுஸுகி அறிவிப்பு!!

ஜனவரி முதல் கார்களின் விலையை உயர்த்தப் போவதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 11 Dec 2020, 10:13 am
இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு கார்களைத் தயாரித்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விற்பனை செய்துவருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே ஆட்டோமொபைல் துறையில் நீடிக்கும் மந்தநிலையால் மாருதி சுஸுகி நிறுவனம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்திச் செலவுகள் அதிகமாக இருப்பதால் அதன் தாக்கத்தை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தும் வகையில் கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் கார்களின் விலையை இரண்டு முறை உயர்த்தியிருந்தது
Samayam Tamil maruti


இந்நிலையில், புத்தாண்டு முதல் கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் இப்போது ரூ..2.95 லட்சம் தொடங்கி பல்வேறு விலைகளில் கார்களை விற்பனை செய்து வருகிறது. ஆல்டோ மாடல் காரின் விலை ரூ.2.95 லட்சத்தில் தொடங்குகிறது. பெரிய ரக எக்ஸ்.எல்.ஆர்.6 கார்களின் விலை ரூ.11.52 லட்சத்தில் தொடங்குகிறது. உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதால் அனைத்து கார்களின் விலையும் ஜனவரி முதல் உயர்த்தப்படவுள்ளது.

மீண்டும் விலை உயர்வு: சென்னையில் காய்கறி விலைப் பட்டியல்!

கடந்த முறை விலை உயர்வு அறிவிப்பு வெளியான போது, மாருதி சுஸுகியின் அனைத்து கார்களின் விலையும் ரூ.1,500 முதல் ரூ.10,000 வரையில் உயர்த்தப்பட்டது. இந்த முறை எவ்வளவு உயரும் என்று தெரியவில்லை. கொரோனா பாதிப்புகள் குறைந்து இப்போதுதான் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளன. மாருதி சுஸுகி நிறுவனத்தைப் பொறுத்தவரையில், நவம்பர் மாதத்தில் இந்நிறுவனம் 2.4 சதவீத விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்திருந்தது. அப்போது மொத்தம் 1,35,775 கார்களை மட்டுமே விற்பனை செய்தது. 2019 நவம்பரில் மொத்தம் 1,39,133 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்