ஆப்நகரம்

Maruti Suzuki: மாருதியின் புதிய ஆலை.. 13000 பேருக்கு வேலை.. 10 லட்சம் கார் டார்கெட்!

மாருதி சுசூகி நிறுவனம் 18,000 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய ஆலையை அமைக்கவுள்ளது.

Samayam Tamil 24 May 2022, 2:13 pm
இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுசூகி (Maruti Suzuki) ஹரியானா மாநிலம் கார்கோடா பகுதியில் 18000 கோடி ரூபாய் முதலீட்டில் மிகப்பெரிய கார் ஆலையை அமைக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
Samayam Tamil maruti suzuki


இதற்காக 2131 கோடி ரூபாயை ஹரியானா அரசுக்கு மாருதி சுசூகி நிறுவனம் செலுத்தியுள்ளது. அடுத்த எட்டு ஆண்டுகளில் இந்த ஆலை முழு வீச்சில் 10 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் எனவும் மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதற்கட்ட உற்பத்திக்காக 11,000 கோடி ரூபாயை மாருதி சுசூகி முதலீடு செய்கிறது. இத்தொகை நிலம், ஆலை, உள்கட்டமைப்பு மற்றும் இதர வசதிகளுக்காக பயன்படுத்தப்படும். முதற்கட்டத்தில் 2.5 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படும்.

சேவைக் கட்டணம் கட்டாயமில்லை.. உணவகங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
2025ஆம் ஆண்டு முதல் முதற்கட்ட உற்பத்தி தொடங்கும். 2026ஆம் ஆண்டு முதல் இரண்டாம் கட்ட உற்பத்தி தொடங்கும். இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவது மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.

மாருதியின் இந்தப் புதிய ஆலையில் சுமார் 13,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஏற்கெனவே குருகிராமில் உள்ள ஆலையும் தொடர்ந்து இயங்கும் என மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்