ஆப்நகரம்

தீப்பெட்டி விலை உயர்வு.. உற்பத்தியாளர்கள் எடுத்த முடிவு!

தீப்பெட்டி விலை உயர்த்தப்படுவதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு.

Samayam Tamil 23 Mar 2022, 3:01 pm
உலகம் முழுவதும் பணவீக்கம் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பல்வேறு பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தொடங்கியபின் கச்சா எண்ணெய் விலை பயங்கரமாக உயர்ந்தது.
Samayam Tamil matchstick


கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல், விமான பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையும் உயர்ந்தது. இதனால் பணவீக்கம் மேலும் மோசமடைந்தது. உலகம் முழுவதும் பல்வேறு சரக்குகள், மூலப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

இந்தியாவிலும் இரண்டு நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதேபோல கேஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்து வருகிறது. பணவீக்கத்தின் நெருக்கடியால் சாதாரண பொருட்கள் முதல் கார் விலை வரை உயர்ந்து வருகிறது.

ரேஷன் கார்டு இருக்கா? அப்போ உடனே இந்த வேலைய முடிங்க!!
இந்த வரிசையில் தற்போது தீப்பெட்டி விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெலியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இதில் தீப்பெட்டி விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, தீப்பெட்டி பண்டல் விலை 300 ரூபாயில் இருந்து 350 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், தீப்பெட்டிகளின் சில்லறை விலையில் எந்த மாற்றமும் இருக்காது என சங்கம் சார்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்