ஆப்நகரம்

SBI வாடிக்கையாளர்களுக்கு மே 31 வரை அவகாசம்!!

வீட்டிலிருந்தே KYC அப்டேட் செய்வதற்கு மே 31 வரை மட்டுமே அவகாசம் இருப்பதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.

Samayam Tamil 5 May 2021, 11:25 am
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளும் நடவடிக்கையில், எளிய முறையில் அப்டேட் செய்வதற்கு வீட்டிலிருந்தே ஆவணங்களை தபால் மூலமாகவும், ஈமெயில் மூலமாகவும் அனுப்பும் வசதியை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கொண்டுவந்துள்ளது. கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டியவர்கள் இந்த கொரோனா சமயத்தில் வங்கிக் கிளைக்கு வந்துசெல்வது சிரமமாக இருக்கும் என்பதால் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டது.
Samayam Tamil SBI


இந்நிலையில், இந்த மாத இறுதிக்குள் வாடிக்கையாளர்கள் கேஒய்சி அப்டேட் செய்யும்படி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது ட்விட்டர் பதிவில், ‘நாடு முழுவதும் கொரோனா பிரச்சினை தீவிரமாக இருப்பதாலும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமலில் இருப்பதாலும் வாடிக்கையாளர்கள் தங்களது கேஒய்சி அப்டேட் செய்யத் தேவையான ஆவணங்களை தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 31 வரையில் மட்டுமே இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தனது வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை குறிப்பிட்ட கால அளவில் சோதனை செய்கிறது. அதாவது வாடிக்கையாளரின் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் மற்றும் கடன் நிலையைப் பொறுத்து அவர்களின் கேஒய்சி விவரங்கள் சரிபார்க்கப்படுகின்றன. குறைந்த அபாயம் கொண்ட வங்கிக் கணக்கு வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், நடுத்தர அபாயம் கொண்ட வங்கிக் கணக்கு வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு 8 ஆண்டுகளுக்கும் ஒரு முறையும், அதிக அபாயம் கொண்ட வங்கிக் கணக்கு வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் கேஒய்சி அப்டேட் செய்யப்படுகிறது.

இந்த சூழலில்தான் தற்போது கேஒய்சி அப்டேட்டுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்