கொரோனா வைரஸ் கொள்ளை நோயை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ள நிலையில் பல்வேறு தொழில்துறைகள் இயங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்துக்கு அரசு விலக்களித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் கூடுதலாக சில தொழில்துறைகள் இயங்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏராளமான மக்கள் மீனை உணவாக எடுத்துக்கொள்வதாகவும், மீன் அத்தியாவசியப் பொருளாக இருப்பதால் மீன் உணவு உற்பத்தி தொடர்பான செயல்பாடுகளுக்கு ஊரடங்கிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று தொழில்துறையினர் வலியுறுத்தினர்.
இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 10) மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மார்ச் 24, 25, 27, ஏப்ரல் 2, 3 ஆகிய தேதிகளில் வெளியான உத்தரவுகளின் தொடர்ச்சியாக, பேரிடர் மேலாண்மை சட்டப் பிரிவு 10 (2)(I)இன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி தேசிய தலைமைக் குழுவின் தலைவர் இந்த பிற்சேர்க்கயை வெளியிட்டுள்ளார். இதன்படி இந்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுகள், ஒன்றிய அரசுகளுக்கு உடனடியாக இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தும்படி அறிவுறுத்தப்படுகிறது.
கடல்சார் மீன் உற்பத்தி, மீன் வளர்ப்பு, மீன்களுக்கு உணவளித்தல் மற்றும் பராமரிப்பு, அறுவடை, பதப்படுத்துதல், பேக்கேஜிங், குளிர்பதன சேமிப்பு, விற்பனை, சந்தைப்படுத்துதல், குஞ்சு பொரிப்பகங்கள், தீவன ஆலைகள், வர்த்தக மீன் காட்சியகங்கள் ஆகியவை இயங்குவதற்கும், மீன், இறால், மீன் பொருட்கள், மீன் முட்டைகள், தீவனம், ஊழியர்களின் போக்குவரத்துக்கும் அனுமதியளிக்கப்படுகிறது.
ஊரடங்கு உத்தரவு பாதுகாப்பு விதிமுறைகளில் குறிப்பிட்டிருந்ததைப் போல சரீர விலகல், தனிநபர் சுகாதாரம் போன்றவை உறுதி செய்யப்பட வேண்டும். விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது தொடர்பான பொறுப்புகள் நிறுவனத்தின் தலைவரையே சேரும். இந்த உத்தரவு சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதை மாவட்ட அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்துக்கு அரசு விலக்களித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் கூடுதலாக சில தொழில்துறைகள் இயங்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏராளமான மக்கள் மீனை உணவாக எடுத்துக்கொள்வதாகவும், மீன் அத்தியாவசியப் பொருளாக இருப்பதால் மீன் உணவு உற்பத்தி தொடர்பான செயல்பாடுகளுக்கு ஊரடங்கிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று தொழில்துறையினர் வலியுறுத்தினர்.
இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 10) மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மார்ச் 24, 25, 27, ஏப்ரல் 2, 3 ஆகிய தேதிகளில் வெளியான உத்தரவுகளின் தொடர்ச்சியாக, பேரிடர் மேலாண்மை சட்டப் பிரிவு 10 (2)(I)இன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி தேசிய தலைமைக் குழுவின் தலைவர் இந்த பிற்சேர்க்கயை வெளியிட்டுள்ளார். இதன்படி இந்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுகள், ஒன்றிய அரசுகளுக்கு உடனடியாக இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தும்படி அறிவுறுத்தப்படுகிறது.
கடல்சார் மீன் உற்பத்தி, மீன் வளர்ப்பு, மீன்களுக்கு உணவளித்தல் மற்றும் பராமரிப்பு, அறுவடை, பதப்படுத்துதல், பேக்கேஜிங், குளிர்பதன சேமிப்பு, விற்பனை, சந்தைப்படுத்துதல், குஞ்சு பொரிப்பகங்கள், தீவன ஆலைகள், வர்த்தக மீன் காட்சியகங்கள் ஆகியவை இயங்குவதற்கும், மீன், இறால், மீன் பொருட்கள், மீன் முட்டைகள், தீவனம், ஊழியர்களின் போக்குவரத்துக்கும் அனுமதியளிக்கப்படுகிறது.
ஊரடங்கு உத்தரவு பாதுகாப்பு விதிமுறைகளில் குறிப்பிட்டிருந்ததைப் போல சரீர விலகல், தனிநபர் சுகாதாரம் போன்றவை உறுதி செய்யப்பட வேண்டும். விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது தொடர்பான பொறுப்புகள் நிறுவனத்தின் தலைவரையே சேரும். இந்த உத்தரவு சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதை மாவட்ட அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.