ஆப்நகரம்

சம்பளம் டபுள் மடங்கு உயர்வு.. ராஜினாமா செய்யும் ஊழியர்களை தடுக்க முடிவு!

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இருமடங்கு சம்பள உயர்வு வழங்க முடிவு செய்துள்ளது.

Samayam Tamil 17 May 2022, 12:22 pm
மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் சீனியர் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை பலரும் மொத்தமாக ராஜினாமா செய்து வருகின்றனர். இதனால் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிர்வாகங்கள் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன.
Samayam Tamil Microsoft


ஊழியர்களுக்கு போதிய சம்பள உயர்வு வழங்காததாலேயே மொத்தமாக ராஜினாமா செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஊழியர்களுக்கு டபுள் மடங்கு சம்பள உயர்வு வழங்க மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனம் முடிவு செய்துள்ளது.

திறமை வாய்ந்த ஊழியர்களை தக்கவைப்பது மிக முக்கியம் என்பதால் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது பட்ஜெட்டை கிட்டத்தட்ட இருமடங்கு உயர்த்தியுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி சத்யா நாடெல்லா தெரிவித்துள்ளார்.

இனி தங்கத்தில்தான் சம்பளம் கொடுப்போம்.. திடீர் முடிவெடுத்த நிறுவனம்!
இதுகுறித்து மைக்ரோசாஃப்ட் ஊழியர்களுக்கு சத்யா நாடெல்லா அனுப்பியுள்ள இமெயிலில், “நமது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவையாற்றி வருவதால் நம் திறமை வாய்ந்த ஊழியர்களுக்கு தொடர்ந்து அதிக டிமாண்ட் இருப்பதை பார்க்கிறோம்.

தலைமை குழுவை சேர்ந்தவர்களின் செயல்களுக்கு அங்கீகாரமும் பாராட்டுகளும் உண்டு. அதற்காக நான் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே உங்களில் ஒவ்வொருவரிலும் நாங்கள் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாஃப்ட் தற்போது சம்பள உயர்வு அளித்துள்ள நிலையில் ஏற்கெனவே கடந்த பிப்ரவரி மாதம் அமேசான் தனது கார்ப்பரேட் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களுக்கான அதிகபட்ச அடிப்படை சம்பளத்தை 160,000 டாலரில் இருந்து 350,000 டாலராக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

அதற்கு முன் கூகுள் நிறுவனமும் மின சீனியர் அதிகாரிகள் நான்கு பேருக்கு அடிப்படை சம்பளத்தை 650,000 டாலரில் இருந்து 1 மில்லியன் டாலராக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்