ஆப்நகரம்

1800 ஊழியர்களுக்கு வேலை காலி.. மைக்ரோசாஃப்ட் செயலால் அதிர்ச்சி!

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சுமார் 1800 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

Samayam Tamil 11 Aug 2022, 1:24 pm
மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 1800 ஊழியர்களை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மைக்ரோசாஃப்ட் தனது ஊழியர்களில் 1% பேரை நீக்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
Samayam Tamil microsoft


இந்த தடாலடி பணிநீக்கத்தால், பல்வேறு பகுதிகளில் வேலைசெய்து வந்த ஒப்பந்த ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக LinkedIn தளத்தில், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பதிவிட்டுள்ளனர். இதேபோல, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் மாடர்ன் லைஃப் எக்ஸ்பீரியன்சஸ் நிறுவனத்தில் சுமார் 200 ஊழியர்கள் வேறு வேலையை பார்த்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளரும் ஒப்புக்கொண்டுள்ளார். ஏற்கெனவே சில ஊழியர்களை மைக்ரோசாஃப்ட் பணிநீக்கம் செய்திருந்தது. இந்நிலையில், சுமார் 1800 ஊழியர்களை மைக்ரோசாஃப்ட் நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TATA Profit: டாடா லாபம் 164% உயர்வு.. சந்திரசேகரனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மட்டுமல்லாமல் டெஸ்லா, நெட்ஃபிக்ஸ் உள்பட பல்வேறு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை நீக்கியுள்ளன. செலவுகளை குறைக்கவும், மறுசீரமைப்புக்காகவும் ஊழியர்களை நீக்கியுள்ளதாக நிறுவனங்கள் கூறுகின்றன.

எனினும், பொருளாதார சூழல் சரியில்லாததாலும், பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற அச்சத்தாலும் ஊழியர்களை நிறுவனங்கள் நீக்கி வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்